வீட்டில் உபயோகிக்கும் சமையல் கேஸ் சிலிண்டர் விலை 25 ரூபாய் உயர்ந்துள்ளது.
கச்சா எண்ணெயின் விலை சர்வதேச சந்தையில் உள்ள விலைக்கேற்ப சமையல் கேஸ் சிலிண்டர் மற்றும் டீசல், பெட்ரோலுக்கான விலை நிர்ணயிக்கப்பட்டு கொண்டிருக்கிறது. அண்மையில் கூட பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ள நிலையில் தற்போது சமையல் எரிவாயு சிலிண்டர் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த டிசம்பர் மாத இறுதியில் ஒரு முறை கேஸ் சிலிண்டரின் விலை அதிகரித்தது.
தற்பொழுதும் சென்னையில் 810 ரூபாய்க்கு விற்பனையாகி வந்த சிலிண்டர், மீண்டும் பிப்ரவரி மாதம் விலை அதிகரிப்பால் 835 ரூபாயாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இதன் பின் பத்து ரூபாய் குறைக்கப்பட்டு மீண்டும் 825 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது மீண்டும் 25 ரூபாய் அதிகரித்து 14.2 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு 850 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே மக்கள் பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக அவதிப்பட்டு வரும் நிலையில், தற்பொழுது சமையல் எரிவாயு சிலிண்டர் விலையும் அதிகரித்துள்ளது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…
சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…
சென்னை : விழுப்புரம் விக்கிரவாண்டியில் அக்.27ல் தவெக மாநாடு நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக…
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…