வீட்டில் உபயோகிக்கும் சமையல் கேஸ் சிலிண்டர் விலை 25 ரூபாய் உயர்ந்துள்ளது.
கச்சா எண்ணெயின் விலை சர்வதேச சந்தையில் உள்ள விலைக்கேற்ப சமையல் கேஸ் சிலிண்டர் மற்றும் டீசல், பெட்ரோலுக்கான விலை நிர்ணயிக்கப்பட்டு கொண்டிருக்கிறது. அண்மையில் கூட பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ள நிலையில் தற்போது சமையல் எரிவாயு சிலிண்டர் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த டிசம்பர் மாத இறுதியில் ஒரு முறை கேஸ் சிலிண்டரின் விலை அதிகரித்தது.
தற்பொழுதும் சென்னையில் 810 ரூபாய்க்கு விற்பனையாகி வந்த சிலிண்டர், மீண்டும் பிப்ரவரி மாதம் விலை அதிகரிப்பால் 835 ரூபாயாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இதன் பின் பத்து ரூபாய் குறைக்கப்பட்டு மீண்டும் 825 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது மீண்டும் 25 ரூபாய் அதிகரித்து 14.2 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு 850 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே மக்கள் பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக அவதிப்பட்டு வரும் நிலையில், தற்பொழுது சமையல் எரிவாயு சிலிண்டர் விலையும் அதிகரித்துள்ளது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை : நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறிவிட்டு ஏமாற்றிவிட்டதாக நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல்…
கராச்சி : சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்து அணியும், தென்னாபிரிக்கா அணியும் கராச்சி தேசிய மைதானத்தில்…
சென்னை : மாஸ் வேணுமா மாஸ் இருக்கு...கிளாஸ் லுக் வேணுமா அதுவும் இருக்கு என்கிற வகையில் ரசிகர்களை வெகுவாக கவரும்…
சென்னை : நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறிவிட்டு ஏமாற்றிவிட்டதாக நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகார் இப்போது…
கராச்சி : நம்ம இங்கிலாந்து அணிக்கு என்னதான் ஆச்சு என்ற கேள்வியை எழுப்பும் வகையில் மோசமான ஆட்டத்தை சமீபகாலமாக வெளிப்படுத்தி…
கோவை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாள் விழாவானது நேற்று சென்னை தரமணி YMCA மைதானத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது. இதில்…