மாணவி தற்கொலைக்கு மதமாற்றம் காரணமில்லை – தேசிய குழந்தைகள் நல ஆணையம் அறிக்கை..!

Published by
murugan

அரியலூர் மாணவி லாவண்யாவின் மரணத்திற்கு மதமாற்றம் காரணம் இல்லை என தேசிய குழந்தைகள் நல ஆணையம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அரியலூர் மாவட்டத்தில் உள்ள வடுகப்பாளையத்தைச் சேர்ந்த 17 வயது மாணவி ஒருவர் தஞ்சை மாவட்டத்தில் உள்ள தனியார் கிறிஸ்தவ பள்ளியில் படித்து வந்தார். மேலும், விடுதியில் தங்கி படித்து வந்த அந்த மாணவி, கடந்த ஜனவரி 9-ஆம் தேதி பூச்சி மருந்தைக் குடித்த நிலையில் 19-ஆம் தேதி உயிரிழந்தார்.

இதனையடுத்து, மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் பல சர்ச்சைகள் எழுந்து வந்தது. மாணவியின் தற்கொலைக்கு பள்ளி நிர்வாகம் மத மாற்ற செய்ய அழுத்தம் தான் காரணம் என கூறப்படுகிறது. ஆனால், இது வெறும் வதந்தி என்றும், பொய்யான செய்திகள் பரப்பப்படுவதாக பள்ளி நிர்வாகம் தெரிவித்தது.

மாணவியின் தந்தை முருகானந்தம் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.  இந்த விவகாரத்தை சிபிஐ விசாரிக்க கடந்த ஜனவரி 31-ம் தேதி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது. சிபிஐ-க்கு மாற்றி உயர்நீதிமன்றம் மதுரை கிளை பிறப்பித்த உத்தரவுக்குத் தடை விதிக்கக்கோரி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது. ஆனால், சிபிஐ விசாரிக்கத் தடை விதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதனைத்தொடர்ந்து சிபிஐ விசாரணையைத் தொடங்கினர்.

இந்நிலையில்,  அரியலூர் மாணவி லாவண்யா மரணம் தொடர்பான விசாரணை அறிக்கையை தமிழக தலைமை செயலாளர் மற்றும் டிஜிபிக்கு  தேசிய குழந்தைகள் நல ஆணையம் அனுப்பியது. அதில்,  அரியலூர் மாணவி லாவண்யாவின் மரணத்திற்கு மதமாற்றம் காரணம் இல்லை. மாணவியின் பெற்றோர், சகோதரருக்கு மனநல ஆலோசனை வழங்க வேண்டும் என தேசிய குழந்தைகள் நல ஆணையம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Recent Posts

“சாம்பியன்ஸ் டிராபியை இந்தியா வெல்லும்” மெஸ்ஸியின் ஜாதகத்துடன் ரோஹித் ஜாதகத்தை ஒப்பிட்டு கணித்த ஜோதிடர்.!“சாம்பியன்ஸ் டிராபியை இந்தியா வெல்லும்” மெஸ்ஸியின் ஜாதகத்துடன் ரோஹித் ஜாதகத்தை ஒப்பிட்டு கணித்த ஜோதிடர்.!

“சாம்பியன்ஸ் டிராபியை இந்தியா வெல்லும்” மெஸ்ஸியின் ஜாதகத்துடன் ரோஹித் ஜாதகத்தை ஒப்பிட்டு கணித்த ஜோதிடர்.!

டெல்லி : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி, நாளை மறுநாள் (மார்ச் 9) துபாயில் நடைபெறும் இறுதி போட்டியில்…

4 hours ago
தொடையில் வைத்து தங்கக் கட்டி கடத்தல்.. நடிகை ரன்யா ராவை 3 நாள் காவலில் எடுக்கும் போலீசார்.!தொடையில் வைத்து தங்கக் கட்டி கடத்தல்.. நடிகை ரன்யா ராவை 3 நாள் காவலில் எடுக்கும் போலீசார்.!

தொடையில் வைத்து தங்கக் கட்டி கடத்தல்.. நடிகை ரன்யா ராவை 3 நாள் காவலில் எடுக்கும் போலீசார்.!

பெங்களூரு : துபாயில் இருந்து 14 கிலோ தங்கக் கட்டிகளை கடத்தி வந்த கன்னட நடிகை ரன்யா ராவு கடந்த…

6 hours ago
இஃப்தார் நோன்பு நிகழ்ச்சி: ஒருநாள் விரதமிருந்து நோன்பு திறந்தார் தவெக தலைவர் விஜய்.!இஃப்தார் நோன்பு நிகழ்ச்சி: ஒருநாள் விரதமிருந்து நோன்பு திறந்தார் தவெக தலைவர் விஜய்.!

இஃப்தார் நோன்பு நிகழ்ச்சி: ஒருநாள் விரதமிருந்து நோன்பு திறந்தார் தவெக தலைவர் விஜய்.!

சென்னை : தவெக சார்பில் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடத்தப்பட்ட இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் அக்கட்சியின் தலைவர்…

7 hours ago
சாம்பியன்ஸ் டிராபிக்கு பிறகு ஓய்வா? கேள்வி கேட்கும் பிசிசிஐ..மௌனம் காக்கும் ரோஹித்?சாம்பியன்ஸ் டிராபிக்கு பிறகு ஓய்வா? கேள்வி கேட்கும் பிசிசிஐ..மௌனம் காக்கும் ரோஹித்?

சாம்பியன்ஸ் டிராபிக்கு பிறகு ஓய்வா? கேள்வி கேட்கும் பிசிசிஐ..மௌனம் காக்கும் ரோஹித்?

துபாய் : 37 வயதான இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா ஓய்வு குறித்த தகவல் அடிக்கடி சமூக வலைத்தளங்களில் ஓடி…

7 hours ago
வெள்ளை வேட்டி, சட்டை… தலையில் தொப்பி.! நோன்பு திறக்கும் நிகழ்ச்சிக்கு மாஸாக வந்திறங்கிய விஜய்.!வெள்ளை வேட்டி, சட்டை… தலையில் தொப்பி.! நோன்பு திறக்கும் நிகழ்ச்சிக்கு மாஸாக வந்திறங்கிய விஜய்.!

வெள்ளை வேட்டி, சட்டை… தலையில் தொப்பி.! நோன்பு திறக்கும் நிகழ்ச்சிக்கு மாஸாக வந்திறங்கிய விஜய்.!

சென்னை : சென்னை ராயப்பேட்டை YMCA அரங்கில் தவெக சார்பில் இன்று மாலை நடைபெறவுள்ள இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில்…

8 hours ago
பாஜக கூட்டணி வேணும் என தவம் கிடக்கிறார்கள்! அண்ணாமலை பேச்சு!பாஜக கூட்டணி வேணும் என தவம் கிடக்கிறார்கள்! அண்ணாமலை பேச்சு!

பாஜக கூட்டணி வேணும் என தவம் கிடக்கிறார்கள்! அண்ணாமலை பேச்சு!

சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் பாஜக - அதிமுகவுடன் கூட்டணி வைக்க வாய்ப்புகள் இருப்பதாக அரசியல் வட்டாரத்தில்…

8 hours ago