தமிழக சட்டசபை இந்த ஆண்டின் முதல் கூட்டம் நேற்று முன்தினம் தொடங்கியது.நேற்று 2-ம் நாள் சட்டசபை கூட்டம் நடைபெற்றது.நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தல் நேர்மையாக நடைபெற வில்லை என திமுக துணை தலைவர் துரைமுருகன் குற்றம்சாட்டினார். இது தொடர்பாக துரைமுருகன் மற்றும் அமைச்சர்கள் வேலுமணி இடையே விவாதம் நீண்டது. பின்னர் இடைமறித்து பேசிய முதலமைச்சர் பழனிசாமி,
உள்ளாட்சி தேர்தலில் எந்த தவறும் நடக்கவில்லை எனவும், இந்த தேர்தலை நடத்தியதும் ,வாக்குகளை எண்ணியதும் அரசு ஊழியர்கள் தான் அப்படி என்றால் அரசு ஊழியர்கள் தவறு செய்தார்களா..? என அவர் கேள்வி எழுப்பினார்.
மேலும் தேர்தலை நேர்மையாக நடத்தவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுவது தேர்தல் பணியில் ஈடுபட்ட ஊழியர்களுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் எதிர்க்கட்சியினர் பேசுவதாக பழனிசாமி குற்றம் சாட்டினார்.
இந்த தேர்தல் பொறுத்தவரை தேர்தல் ஆணையம் முறையாக தேர்தல் நடத்தி உள்ளது.அந்த தேர்தல் பணியில் ஈடுபட்ட ஊழியர்கள் நேர்மையோடும் ,நீதியோடும் நடுநிலையோடு செயல்பட்டு இருக்கிறார்கள்.அதனால் தான் 400-க்கும் மேற்பட்ட சுயேட்சை வேட்பாளர்கள் வெற்றி வெற்றி பெற்று இருக்கிறார்கள் என கூறினார்.
மும்பை : மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் 2025 - இன் 45வது…
குரும்பபாளையம் : கோவையில் நேற்றைய தினத்தை தொடர்ந்து, இன்றும் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக (தவெக) பூத் கமிட்டி கருத்தரங்கம்,…
சரவணம்பட்டி : கோவையில் 2ஆம் நாளாக இன்று (ஏப்.27) தவெக வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கு நடைபெறுகிறது. குரும்பபாளையத்தில் உள்ள கல்லூரி…
கோவை : தவெக தலைவர் விஜய், கோவையில் இன்று இரண்டாவது நாளாக ரோட் ஷோவில் ஈடுபட்டுள்ளார். சரவணம்பட்டியில் நேற்று பூத்…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 45வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…
ராவல்பிண்டி : 26 பேர் கொல்லப்பட்ட பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தொடர்ச்சியான எதிர் நடவடிக்கைகளை…