ராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சைக்குரிய பேச்சு ! திரும்பப் பெற போவதில்லை -சீமான்

Default Image

ராஜீவ் காந்தி குறித்த பேச்சை திரும்பப் பெற போவதில்லை என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
ராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக நாம்தமிழர் கட்சி சீமான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. வன்முறையைத் தூண்டுதல்(153A), பொது அமைதிக்குக் குந்தகம் விளைவித்தல் (504) ஆகிய  பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.இதற்கு காங்கிரஸ் கட்சி தரப்பில் கடும் கண்டனம் தெரிவித்துவருகின்றனர்.
இந்த நிலையில் இது குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறுகையில், ராஜீவ் காந்தி குறித்த பேச்சை திரும்பப் பெற போவதில்லை.தேசிய ஒருமைப்பாடு குறித்து பேச காங்கிரசுக்கு தகுதியில்லை. 7 பேர் விடுதலைக்கு 27 ஆண்டுகளாக முட்டுக்கட்டை போட்டு வருகின்றனர்.
என் மேல் ஏராளமான வழக்குகள் உள்ளது, இது புதிதல்ல. தமிழக பாரம்பரிய உடையை பிரதமர் மோடி அணிந்தது மகிழ்ச்சி என்றும் தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்