முதல்வர் தாயார் குறித்த சர்ச்சை பேச்சு… தேர்தல் ஆணையத்திடம் விளக்கமளித்த திமுக எம்.பி.ஆ.ராசா.!

Published by
பாலா கலியமூர்த்தி

முதல்வர் பற்றி நான் பேசியதை அதிமுக, பாஜகவினர் தவறாக பரப்புகின்றனர் என திமுக எம்பி ஆ.ராசா தேர்தல் ஆணையத்திடம் விளக்கமளித்துள்ளார்.

கடந்த ஒருசில நாட்களுக்கு முன்பு சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் தேர்தல் பரப்புரை மேற்கொண்ட திமுக எம்.பி. ஆ.ராசா முதல்வர் பழனிசாமியின் தாயார் குறித்து அவதூறாக பேசியதாக கூறி குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இதுகுறித்து ஆ.ராசா விளக்கமளித்ததை தொடர்ந்து, முதல்வர் பழனிசாமி உண்மையிலேயே கலங்கியிருந்தால் மன்னிப்பு கோருகிறேன் என்றும் தெரிவித்திருந்தார்.

இதனிடையே, அதிமுக தரப்பில், திமுக எம்.பி ஆ.ராசா மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் ஆ.ராசா மீது 3 பிரிவுகளின் கீழ் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் இதுகுறித்து ஆ.ராசா விளக்கமளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையமும் கூறியிருந்தது. இந்த நிலையில், ஆ.ராசா தேர்தல் ஆணையத்திற்கு விளக்கம் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதில், திராவிட இயக்கத்தில் வளர்ந்த நான் ஒருபோதும் பெண்மையை தரக்குறைவாக பேசியதில்லை, அப்படி பேசுபவரும் இல்லை. அரசியல் தொடர்பான முறையிலேயே முகஸ்டாலின் மற்றும் முதல்வர் பழனிசாமியை ஒப்பீட்டு பேசினேன். வேறு எந்த உள்நோக்கத்துடன் தவறான அர்த்தத்திலும் நான் பேசவில்லை. பெண்களின் கண்ணியத்திற்கு குறைவாகவும், தேர்தல் நடத்தை விதிகளை மீறியும் நான் பேசவில்லை என தெரிவித்துள்ளார்.

முதல்வர் கண்கலங்கியது அறிந்து மனம் திறந்து மன்னிப்பும் கோரியுள்ளேன். அதிமுகவினர் என்மீது என்னென்ன புகார்கள் வைத்துள்ளனர் என்பதை எனக்கு விளக்கமாக சொல்லுங்கள். அப்போதுதான் என்னால் விளக்கமாக பதில் அளிக்க வாய்ப்பு இருக்கும். எனது வழக்கறிஞருடன் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க கூடுதல் அவகாசம் கொடுக்க வேண்டும். நான் என்ன தவறாக பேசினேன் என்பதை எழுத்துப்பூர்வமாக தெரிவியுங்கள் என்றும் கேட்டுள்ளார்.

மேலும், எனது பேச்சின் முழு வீடியோவையும் பார்த்தால் தற்போதைய குற்றச்சாட்டு அரசியல் ரீதியாக திரித்து பரப்பப்பட்டு வருகிறது என்பது தெரியும். முதலமைச்சர் பற்றி நான் பேசியதை அதிமுக, பாஜகவினர் திரித்து பரப்புகின்றனர். அதிமுகவின் புகார் நகலையும், தேர்தல் ஆணையம் கவனத்திற்கு எடுத்துக்கொண்ட முழு விவரங்களையும் தனக்கு அளிக்க வேண்டும் என்றும் அவற்றை பெற்றப்பின் முழு விளக்கத்தை அளிப்பதாக தெரிவித்துள்ளார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

வெப்பம், குளிர், மழை… அடுத்த 6 நாட்களுக்கு வானிலை எப்படி இருக்கும்?

வெப்பம், குளிர், மழை… அடுத்த 6 நாட்களுக்கு வானிலை எப்படி இருக்கும்?

சென்னை : தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணாமாக, தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…

33 minutes ago

பாகிஸ்தான் ராணுவம் மீது பலுசிஸ்தான் தற்கொலைப்படை தாக்குதல்.! 90 பேர் பலி?

பாகிஸ்தான் :பலுசிஸ்தான் விடுதலைப் படை (Baloch Liberation Army - BLA) பாகிஸ்தானின் நோஷ்கி பகுதியில் பாகிஸ்தான் ராணுவப் படைகளின்…

1 hour ago

டிரம்பின் உத்தரவு: ஏமனில் புகுந்து காலி செய்யும் அமெரிக்கா.! உயரும் பலி எண்ணிக்கை.!

ஏடன்: அமெரிக்கா ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது பெரிய அளவிலான தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்…

3 hours ago

ஏ.ஆர்.ரஹ்மான் டிஸ்சார்ஜ்: நலம் விசாரித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

சென்னை : திடீர் உடல்நலக்குறைவால் ஏ.ஆர்.ரகுமான் சென்னை அப்போலோவில் இன்று காலை அனுமதிக்கப்பட்டார். இந்த செய்தியை கேட்ட உடன் முதல்வர்…

4 hours ago

டாஸ்மாக் முறைகேடு: “சிறுமீன்கள் முதல் திமிங்கலங்கள் வரை சிக்கும்”- தவெக தலைவர் விஜய் பரபரப்பு அறிக்கை!

சென்னை : டாஸ்மாக் முறைகேடு விவகாரம் தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமலாக்கத் துறை மார்ச் 6, 2025ல்…

5 hours ago

ஐயோ!! ஏ.ஆர்.ரஹ்மானுக்கு என்ன ஆச்சு? திடீர் நெஞ்சு வலியால் மருத்துவமனையில் அனுமதி.!

சென்னை : பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு அதிகாலை திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து, சென்னை அப்போலோவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவசர சிகிச்சை…

7 hours ago