தொடர் மழை ! பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு

Default Image

நீலகிரி மாவட்டத்தில் மழை காரணமாக நாளை பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்திருக்கும் நிலையில் தமிழகத்திற்கு நாளை ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இதன் காரணமாக தேனி,திண்டுக்கல்,கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் மிக அதிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது  என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது .
ஆனால் நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாகவே மழை பெய்து வருகிறது. இந்த நிலையில்  நீலகிரி மாவட்டத்தில் மழை காரணமாக நாளை பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை என்று மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா அறிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்