திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு இன்று இரவுக்குள் தொகுதி பங்கீடு குறித்த ஒப்பந்தம் கையெழுத்தாகிறது என்று கூறப்படுகிறது.
திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையில் மதிமுக தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. மதிமுக சார்பில் 8 தொகுதிகள் கேட்கப்படும் நிலையில், 5 தொகுதிகளை ஒதுக்க திமுக முன்வந்துள்ளதாக கூறப்பட்ட நிலையில், தொடர்ந்து தொகுதி பணங்கிடு பேச்சுவார்த்தை இழுபறியில் இருந்து வந்தது.
இம்மாதம் 12ம் தேதி தேர்தலுக்கான வேட்பு மனுவை தாக்கல் செய்வதற்கான நாள் தொடங்குகிறது. அதற்குள்ளாக தொகுதி பங்கீட்டை முடிக்க வேண்டிய அவசியம் பிரதான கட்சிகளுக்கு உள்ளது. இந்நிலையில் இன்று இரவுக்குள் திமுகவுடன் தொகுதி பங்கீட்டை மதிமுக இறுதி செய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
திமுக-மதிமுக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில், ஆரம்பத்தில் 4 இடங்கள் வரை ஒதுக்க திமுகமுன்வந்திருந்தது. தற்போது, 5முதல் 6 தொகுதிகள் ஒதுக்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று இரவுக்குள் தொகுதி பங்கீடு குறித்த ஒப்பந்தம் கையெழுத்தாகிறது என்று கூறப்படுகிறது. அதற்கான அனைத்து ஏற்பாடுகள் அண்ணா அறிவாலயத்தில் தயாராக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சென்னை : இந்த ஆண்டுக்கான (2025) பத்ம பூஷன் விருது கடந்த ஜனவரி 25-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு யாருக்கெல்லாம்…
ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…
டெல்லி : ஆண்டுதோறும் எந்த ஒரு துறையிலும், சிறந்து விளங்கும் ஒருவருக்கு, இவ்விருது வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த ஆண்டுக்கான (2025)…
சென்னை : திமுக தலைமையிலான அமைச்சரவையில் 6வது முறையாக அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பரிந்துரையின்படி அமைச்சரைவை இலாகாக்களில் மாற்றம்…
ரஷ்யா : மற்றும் உக்ரைன் இடையே நடந்து வரும் போர் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக இன்னும் நிற்காமல் தொடர்ச்சியாக நடந்து வருவது…
ஹைதராபாத் : நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் ரெட்ரோ. இந்த திரைப்படம் வரும்…