திருமணம், இறுதிச் சடங்குகளுக்கு தொடரும் கட்டுப்பாடுகள்.!

Default Image

திருமணத்தில் அதிகபட்சமாக 50 பேருக்கும், இறுதிச்சடங்குகளில் 20 பேருக்கு அனுமதி என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை மேற்கொண்ட பிறகு, கூடுதல் தளர்வுகளுடனான ஊரடங்கை, செப். 30- ம் தேதி வரை நீடிக்கப்படுவதாக நேற்று தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்த 4 ம் கட்ட ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், திருமணம் மற்றும் இறுதி சடங்கிற்கு ஏற்கனவே உள்ள கட்டுப்பாடுகள் தொடரும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, தமிழகத்தில் திருமணம் நிகழ்ச்சியில் அதிகபட்சமாக 50 பேருக்கும் அனுமதி வழங்கப்படும் என்றும் இறுதிச்சடங்குகளில் 20 பேருக்கு அனுமதி அளிக்கப்படும் என்றும் தமிழக அரசு தற்போது அறிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்