ஆன்லைன் ரம்மியால் பணத்தை இழந்த நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ரியாஸ்கான் என்ற இளைஞர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இன்றைய டிஜிட்டல் உலகில் இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை பலரும் ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையாகி உள்ளனர். ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையானவர்கள் இதற்காக பணத்தை கடன் வாங்கியாவது விளையாட வேண்டும் என்று எண்ணத்திற்கு தள்ளப்படுகின்றனர். இறுதியில் கடன் அதிகமானதால் தற்கொலை செய்து கொள்கின்றனர்.
தற்பொழுது நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ரியாஸ்கான் என்பவர் ஆன்லைன் ரம்மியால் பணத்தை இழந்ததால் தற்கொலை செய்துகொண்டுள்ளார். நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் வசித்துவரும் ரியாஸ்கான் என்பவர் செல்போன் கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். அவரது பொழுதுபோக்கான ஆன்லைன் ரம்மியில் செல்போன் கடையில் வேலை பார்த்து சம்பாதித்த பணத்தை வைத்து விளையாடியுள்ளார்.
இதில் அவர் சம்பாதித்த மொத்த பணத்தை இழந்துள்ளார். பணத்தை இழந்த ரியாஸ்கான் வீட்டில் இருந்து இருசக்கர வாகனத்தில் சென்றுக்கொண்டிருந்த போது திடீரென வாகனத்தை நிறுத்திவிட்டு காவிரி ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். ரியாஸ்கானின் இறப்பு அவரது குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
சென்னை :வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து கடந்த செப்-5ம் தேதி மிகுந்த எதிர்பார்ப்புடன் திரையருங்குகளில் வெளியான GOAT திரைப்படம்…
ஹைதராபாத் : முன்னணி நடன இயக்குநர் ஜானி மீது 21 வயது இளம் பெண் ஐதராபாத் போலீசில் பாலியல் பலாத்கார புகார்…
சென்னை : மணிமேகலை மற்றும் பிரியங்கா ஆகியோருக்கு இடையே நடந்த ஆங்கரிங் பிரச்சனை பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்துள்ள நிலையில்,…
சென்னை : தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் என்கிற (ஃபெப்சி) அமைப்பின் சார்பில், அதன் தலைவர் ஆர்.கே.செல்வமணி நேற்று நிருபர்களுக்கு…
சென்னை- வீட்டில் இருக்கும் கொஞ்ச பொருட்களை வைத்து சட்டென ஒரு ஸ்நாக்ஸ் ரெடி பண்ணனுமா ?அப்போ இந்த பஞ்சு போன்ற…
சென்னை : ஐபிஎல் தொடரில் டெல்லி அணியின் தலைமை பயிற்சியாளராக விலகிய பிறகு தற்போது பஞ்சாப் கிங்ஸ் அணியின் தலைமைப்…