தமிழகத்தில் தொடர் கனமழை : 6 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை …!

Default Image

தமிழகத்தில் தொடர் கனமழை காரணமாக 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளதுடன், 6 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

கடலோரப் பகுதி மற்றும் தென் தமிழக கடலோரப் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நீடித்து வருவதால் கடலோர மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், புதுக்கோட்டை, இராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கடலூர் ஆகிய மாவட்டங்களில் 2 நாட்களுக்கு கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த 5 மாவட்டங்களுக்கும் ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

நேற்று இரவு பல்வேறு மாவட்டங்களிலும் விடிய விடிய மழை கொட்டி தீர்த்ததால் பல பகுதிகளில் வெள்ளநீர் தேங்கி காணப்படுகிறது. எனவே திருவாரூர், கள்ளக்குறிச்சி, நெல்லை, வேலூர், கடலூர் மற்றும் விழுப்புரம் ஆகிய ஆறு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news 2
suseenthiran
BJP WIN
IND vs ENG 2nd ODI cricket match
V. C. Chandhirakumar win
rohit sharma Kevin Pietersen