டிடிவி தினகரனுக்கு தொடரும் சறுக்கல் ! அடுத்ததாக பறிபோகும் ஜெயா தொலைக்காட்சி!

Published by
Sulai

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அரசியலில் தொடர்ந்து தோல்விகளை சந்தித்து சூழ்நிலையில், அவருக்கு ஆதரவாக இருக்கும் ஜெயா தொலைக்காட்சியும் பறிபோகும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
சசிகலா சிறைக்கு சென்ற பின் டிடிவி தினகரன் அமமுக என்ற கட்சி தொடங்கி நடத்தி வந்தார். இதனால், அவருக்கு ஆதரவாக இருந்து வந்த 18 சட்டமன்ற உறுப்பினர்களின் பதவியும் பறிபோனது.இந்நிலையில், கடந்த ஆண்டு இரட்டை இலை அதிமுக விற்கே என்று வெளியான தீர்ப்பிலிருந்து அமமுக கட்சிக்கு தொடர்ந்து சறுக்கல் ஏற்படத் தொடங்கியது. உடன் இருந்த ஒவ்வொருவரும் களையத் தொடங்கினர்.முதலில்,செந்தில் பாலாஜி விலகி திமுக வில் இணைந்து பின்னர் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் அரவக்குறிச்சி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.
பின்னர், நடந்த நாடாளுமன்ற தேர்தலில் யாரும் எதிர்பாராத வகையில், அமமுக  பெரும் தோல்வியை சந்தித்தது. இதனால் பலரும் அந்த கட்சியில் இருந்து விலகி மாற்று கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டனர். தற்போது, தங்க.தமிழ்ச்செல்வன் விலகி திமுகவில் இன்று இணைந்தார்.
இப்படி தொடர்ந்து பின்னிடைவு அடையும் டிடிவி க்கு ஜெயா தொலைக்காட்சியும் அவருக்கு ஆதரவாக செய்திகள் வெளியிட முடியாத நிலை உருவாகி இருப்பதாக ஜெயா நிறுவன CEO விவேக் தெரிவித்துள்ளார். மேலும், இனி ஜெயா தொலைக்காட்சியானது நடுநிலையோடு இருக்கும் என்றும் டிடிவி க்கு ஆதரவான செய்திகள் வெளியிடப்படாது என்று முடிவு செய்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

Published by
Sulai
Tags: #AMMKJEYA TV

Recent Posts

ரியல் ஹீரோ., பஹல்காம் தாக்குதலில் மக்களை காப்பாற்ற உயிர் விட்ட இஸ்லாமிய தொழிலாளி!

ரியல் ஹீரோ., பஹல்காம் தாக்குதலில் மக்களை காப்பாற்ற உயிர் விட்ட இஸ்லாமிய தொழிலாளி!

ஸ்ரீநகர் : காஷ்மீரில் நேற்று அனந்த்நாக் மாவட்டம் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.…

5 minutes ago

காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல்: இன்றைய ஐபிஎல் போட்டியில் கொண்டாட்டத்துக்கு தடை..!

ஹைதராபாத் : ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் நேற்றைய தினம் நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக,…

37 minutes ago

பயங்கரவாத தாக்குதல்., காயமடைந்தவர்களை நேரில் சந்தித்த அமித்ஷா!

ஸ்ரீநகர் : ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்தில் பஹல்காம் பகுதியில் நடந்த தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு…

46 minutes ago

காஷ்மீரில் இருந்து வெளியேறும் சுற்றுலா பயணிகள்., விமான சேவை அதிகரிப்பு! தமிழர்கள் நிலை என்ன?

டெல்லி : நேற்று ( ஏப்ரல் 22) காஷ்மீர் பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம்…

2 hours ago

“இந்த சீசன் சென்னை சரியா ஆடல என்பது உண்மைதான்” – சிஎஸ்கே CEO காசி விஸ்வநாதன்.!

புதுச்சேரி : சிஎஸ்கே அணியின் தொடர் தோல்வி குறித்து கருத்து தெரிவித்த அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் வரும்…

2 hours ago

காஷ்மீர் தாக்குதல் எதிரொலி., உங்கள் பாதையே வேண்டாம்! பாகிஸ்தானை தவிர்த்த பிரதமர் மோடி!

டெல்லி : நேற்று (ஏப்ரல் 22) பிற்பகல் 3 மணியளவில் ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில்…

3 hours ago