பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு – தேதி மாற்றம் செய்து அறிவிப்பு!

Published by
பாலா கலியமூர்த்தி

பொறியியல் படிப்பில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு செப்டம்பர் 17-ஆம் தொடங்குகிறது என்று தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு தேதியை மாற்றம் செய்து தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு பிரிவில் கலந்தாய்வு நடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளது. இதனிடையே, பொறியியல் கல்லூரிகளில் பி.இ., பி.டெக் படிப்பில் சேர விண்ணப்பித்த மாணவர்களுக்கான, ரேண்டம் எண் கடந்த 25ம் தேதி வெளியானது.

இதனைத்தொடர்ந்து, செப் 4ம் தேதி வெளியிடப்பட இருந்த பொறியியல் மாணவ – மாணவிகளுக்காக தரவரிசை பட்டியல் வரும் 14ம் தேதி வெளியிடப்படும் என்று உயர்கல்வி துறை அறிவித்திருந்தது. இந்த நிலையில், தொழிற்கல்வி படிப்பில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு அடிப்படையிலான கலந்தாய்வு, செப். 17ம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை நடைபெறும் என தெரிவித்துள்ளது.

மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு பிரிவு உள்ளிட்ட மாணவர்களுக்கான சிறப்பு கலந்தாய்வும் அதே தேதிகளில் நடைபெறும் என்று கூறியுள்ளது. தொழிற்கல்வி மாணவர்களுக்கான கலந்தாய்வு செப்டம்பர் 24-ஆம் தேதி முதல் அக்டோபர் 5-ஆம் தேதி வரையிலும், பொதுப்பிரிவுக்கான கலந்தாய்வு செப்டம்பர் 24-ஆம் தேதி முதல் அக்டோபர் 17 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

மேலும், துணை கலந்தாய்வு அக்டோபர் 19-ஆம் தேதி முதல் 23-ம் தேதி வரையும், எஸ்சி, எஸ்டி பிரிவு கலந்தாய்வு அக்டோபர் 24 மற்றும் 25ம் தேதியுடன் கலந்தாய்வு நிறைவுபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கலந்தாய்வு ஆன்லைனில் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recent Posts

LSG vs DC : பதிலடி கொடுக்குமா லக்னோ? டாஸ் வென்ற டெல்லி பந்துவீச்சு தேர்வு! 

LSG vs DC : பதிலடி கொடுக்குமா லக்னோ? டாஸ் வென்ற டெல்லி பந்துவீச்சு தேர்வு!

லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…

2 hours ago

பயங்கரவாதிகள் தாக்குதல் : உத்தரவிட்ட பிரதமர் மோடி! காஷ்மீர் விரையும் அமித்ஷா!

ஸ்ரீநகர் : இன்று பிற்பகல் 3 மணி அளவில் ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்திற்கு சுற்றுலா சென்ற பயணிகள் மீது…

2 hours ago

J&K சுற்றுலா பயணிகள் மீது துப்பாக்கிச் சூடு.! ஒருவர் உயிரிழப்பு.., 10 பேர் படுகாயம்.!

பஹல்காம் : ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள்…

3 hours ago

“எல்லோருக்கும் மிகப்பெரிய நன்றி!” அஜித் குமார் டீம் நெகிழ்ச்சி!

சென்னை : நடிகர் அஜித்குமார் சினிமா, நடிப்பை தாண்டி கார் பந்தயத்திலும் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்று வருகிறார். ஏற்கனவே அஜித்குமார்…

3 hours ago

இனி எல்லாமே வெற்றி தான்., பிளே ஆஃப் உறுதி? CSK சிஇஓ நம்பிக்கை!

சென்னை : இந்த வருட ஐபிஎல் சீசன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், ரசிகர்களுக்கும் சோகமான சீசனாகவே அமைந்து வருகிறது.…

4 hours ago

தலைவா… தெய்வமே… பரவசத்தில் வெறும் கையில் ரஜினி ரசிகர் செய்த செயல்.!

கேரளா : ஜெயிலர் 2 படத்தின் அறிவிப்பு வெளியானதிலிருந்து, அதன் ஒவ்வொரு அப்டேட்டையும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். தற்போது,…

4 hours ago