பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு இன்று துவங்குகிறது.
தமிழகம் முழுவதிலும் பொறியியல் கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கைக்கான கலந்தாய்வு இன்று துவங்குகிறது. அதிலும் முதல் கட்டமாக சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு இன்று நடந்துள்ளது. மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியலை கடந்த 28 ஆம் தேதி உயர்கல்வித்துறை அமைச்சர் கேபி அன்பழகன் வெளியிட்டிருந்தார். ஒரு 1,12,406 பேர் அடங்கிய இந்த தரவரிசை பட்டியலில் முதல் 10 இடங்களில் மாணவிகளை காட்டிலும் மாணவர்கள் அதிகமான இடத்தை பிடித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. மூன்றாம் பாலினத்தவர்கள் இந்த பட்டியலில் 15 பேர் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும் மாற்றுத்திறனாளிகள், சிறப்புப் பிரிவினருக்கு அக்டோபர் 1ம் தேதி முதல் 5ம் தேதி வரையிலும் இந்த கலந்தாய்வு நடக்கும் என கூறப்பட்டுள்ளது. விளையாட்டு பிரிவினர் மாற்றுத்திறனாளிகள் முன்னாள் ராணுவத்தினர் வாரிசுகள் என பல்வேறு பொது பிரிவுகளுக்கான கலந்தாய்வு எட்டாம் தேதி முதல் 27-ஆம் தேதி வரை நடக்கும் என கூறப்பட்டுள்ளது. மேலும் 1,63,154 இடங்களுக்கான பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கை இந்த நடப்பு கல்வி ஆண்டில் இருக்கும் என கூறப்பட்டுள்ளது. கலந்தாய்வு துவங்குவதற்கு முன்பாகவே 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்களும் ஏற்பட்டுள்ளது.
சென்னை : பலரும் பார்த்து ரசித்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய கிரிக்கெட் அணி வெற்றிபெற்ற நிலையில், அடுத்ததாக கிரிக்கெட் ரசிகர்களுடைய…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் இன்று தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கை 2025 - 2026 (பட்ஜெட் 2025)-ஐ…
சென்னை : 2025 - 2026 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்து, பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டார் அமைச்சர் தங்கம்…
சென்னை : இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2025 2026 ஆம் ஆண்டுக்கான…
சென்னை : இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2025 2026 ஆம்…
சென்னை : தமிழ்நாடு 2025-26 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் சட்டப்பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டில்…