Construction works in Summer [File Image]
சென்னை : கோடை வெயிலை கருத்தில் கொண்டு சென்னை, மதுரை மாவட்டங்களில் கட்டுமான தொழிலாளர்கள் குறிப்பிட்ட நேரத்தில் வேலை செய்ய வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கோடை வெயிலின் தாக்கம் ஆண்டுதோறும் அதிகரித்து கொண்டே இருக்கிறது. இதனால், பொதுவெளியில் கட்டுமான தொழில்கள் உள்ளிட்ட பல்வேறு வேலைகள் பார்க்கும் தொழிலாளர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். அவர்கள் நலனுக்காக அரசு மற்றும் தொழிலாளர் அமைப்புகள் பல்வேறு செயல்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
இப்படியான கோடை கால சமயத்தில் தற்போது தமிழகத்தில் ஆங்காங்கே மழை பெய்து வந்தாலும், பல்வேறு இடங்களில் வெயிலின் தாக்கம் இருந்து கொண்டு தான் இருக்கிறது. அதனை கருத்தில் கொண்டு, தற்போது தொழிலக பாதுகாப்பு இயக்கம் ஓர் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதன்படி, சென்னை மற்றும் மதுரையில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை திறந்தவெளி கட்டுமானப் பணிகளை தொழிலாளர்கள் மேற்கொள்ள கூடாது என அனைத்து கட்டுமான நிறுவனங்களுக்கும் உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவு மே இறுதி வரையில் நடைமுறையில் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கோடை வெயிலின் தாக்கம் காரணமாக தொழிலாளர்களின் உடல் நிலை கருத்தில் கொண்டு, அதனை தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தொழிலக பாதுகாப்பு இயக்கம் தகவல் தெரிவித்துள்ளது.
இந்த அறிவிப்பானது முறையாக பின்பற்றபடுகிறாதா என்பதை சென்னை மற்றும் மதுரை மாவட்ட இணை இயக்குனர்கள் கண்காணிக்க வேண்டும் என்றும் தொழிக பாதுகாப்பு இயக்ககம் அறிவுறுத்தியுள்ளது.
சென்னை : தமிழ்நாட்டில் வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில், அடுத்த சில நாட்களில் கனமழை சில மாவட்டங்களில் பெய்ய…
சென்னை : தமிழகத்தில் டாஸ்மாக் தலைமை அலுவலகம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட இடங்களில் மார்ச் 6ம் தேதி முதல் 8ம்…
சென்னை : இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜனவரி 6, 2025 அன்று ஆளுநரின் உரையுடன் தொடங்கிய நிலையில்,…
மும்பை : நேற்றைய ஆட்டத்தில் கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் எளிதாக வென்று, நடப்பு ஐபிஎல் சீசனில் முதல் வெற்றியை மும்பை…
மலேசியா : தலைநகர் கோலாலம்பூருக்கு அருகே உள்ள புறநகர்ப் பகுதியான புத்ரா ஹைட்ஸில் (Putra Heights), செலங்கோர் மாநிலத்தில், பெட்ரோனாஸ்…
சென்னை : தமிழ்நாட்டில் தெருநாய்க்கடி சம்பவங்கள் என்பது சமீப ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்து வருகின்றன, உதாரணமாக சொல்லவேண்டும் என்றால், இந்த…