தொகுதி பங்கீடு! 4 தொகுதிகளை கேட்டுள்ளோம்… விசிக தலைவர் பேட்டி!

Published by
பாலா கலியமூர்த்தி

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அனைத்து கட்சிகளும் கூட்டணி, தொகுதி பங்கீடு உள்ளிட்டவைகள் தொடர்பாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில், நாடாளுமன்ற தேர்தலுக்கான தொகுதி பங்கீடு தொடர்பாக விசிக – திமுக இடையே பேச்சுவார்த்தை இன்று நடைபெற்றது.

ஏற்கனவே, தொகுதி பங்கீடு தொடர்பாக காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், மதிமுகவுடன் முதற்கட்ட பேச்சுவார்த்தை முடிந்துள்ள நிலையில், இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் விசிகவுடன் முதற்கட்ட பேச்சுவார்த்தையில் திமுக ஈடுபட்டது. திமுக பொருளாளர் டிஆர் பாலு தலைமையிலான குழுவுடன் விசிக தலைவர் தொல் திருமாவளவன்  பொதுச்செயலாளர் ரவிக்குமார் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

அப்போது, நாடாளுமன்ற தேர்தலில் 6 தொகுதிகளை கொண்ட விருப்ப பட்டியலை திமுக பேச்சுவார்த்தை குழுவிடம் விசிக அளித்துள்ளதாக தகவல் வெளியானது. அதன்படி, சிதம்பரம், காஞ்சிபுரம், விழுப்புரம், திருவள்ளூர், பெரம்பலூர் மற்றும் கள்ளக்குறிச்சி தொகுதிகளை திமுகவிடம் விருப்ப பட்டியலாக அளித்ததாக கூறப்பட்டது.

சட்டப்பேரவையில் இருந்து வெளியேறியது ஏன்? ஆளுநர் விளக்கம்..!

இந்த நிலையில் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைக்கு பிறகு செய்தியாளர் சந்திப்பில் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், கொள்கை சார்ந்து இயங்கும் திமுக கூட்டணி, இந்தியா வரை விரிவடைந்து இந்தியா கூட்டணியாக உருவெடுத்துள்ளது. சட்டப்பேரவையில் ஆளுநர் நடந்துகொண்ட விதம் கண்டனத்துக்குரியது என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் 4 தொகுதிகளில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளோம். 3 தனி தொகுதிகளுடன், ஒரு பொது தொகுதியிலும் போட்டியிட விருப்பம் தெரிவிக்கப்பட்டது. 4 தனி தொகுதிகள் கொடுத்து அதில் 3 தொகுதிகளை கேட்டுள்ளோம். அதாவது, சிதம்பரம், விழுப்புரம், காஞ்சிபுரம், திருவள்ளூர் தொகுதிகளில் மூன்று தொகுதிகளையும், மயிலாடுதுறை, பெரம்பலூர், கள்ளக்குறிச்சி ஆகிய பொது தொகுதிகளில் ஒரு தொகுதியும் ஒதுக்க கோரிக்கை விடுத்துள்ளோம் என தெரிவித்தார்.

Recent Posts

“சிறந்த நடிகர்களில் ஒருவர் விஜய்”! GOAT படத்தை பாராட்டிய பாடலாசிரியர்!

சென்னை : கோட் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அதுவும் ரிலீஸ் ஆன முதல்…

12 hours ago

“அத்தான் அத்தான்”.. அழகாக வெளியான கார்த்தியின் ‘மெய்யழகன்’ டீசர்.!

சென்னை : இயக்குனர் சி பிரேம் குமார் இயக்கத்தில் கார்த்தி மற்றும் அரவிந்த் சாமி முக்கிய வேடங்களில் நடித்துள்ள "மெய்யழகன்"…

12 hours ago

எனக்கு ஏன் காங்கிரஸ் சீட் கொடுக்கவில்லை.? பஜ்ரங் புனியா விளக்கம்.!

டெல்லி : வரும் அக்டோபர் மாதம் நடைபெற உள்ள ஹரியானா மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் மல்யுத்த…

13 hours ago

“RCB கேப்டன் கே.எல்.ராகுல்”! கோஷமிட்ட ரசிகர்கள்..வைரலாகும் வீடியோ!

சென்னை : நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் பெயர் ட்ரெண்டிங்கில் இருந்தது என்றே சொல்லவேண்டும். ஏனென்றால்,…

13 hours ago

“வயிற்றெரிச்சல் பழனிச்சாமி., உங்களுக்கு அருகதை இல்லை .” ஆர்.எஸ்.பாரதி கடும் கண்டனம்.!

சென்னை :  அசோக் நகர் அரசுப் பள்ளியில் மகாவிஷ்ணு என்பவர், மாற்றுத்திறனாளிகள் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதும், அதனை கண்டித்த…

13 hours ago

நிச்சயம் முடிந்து 5 மாதம்: திருமணத்தை நிறுத்திய மலையாள மேக்கப் கலைஞர்.!

திருவனந்தபுரம் : கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த பிரபல மேக்கப் கலைஞரும், திருநங்கையுமான சீமா வினீத், திருமணத்தில் இருந்து விலகுவதாக…

14 hours ago