தேசியத் தலைவர்களையும் தேசிய எழுச்சியையும் முடக்குவதற்காக தொடரப்பட்ட சதி வழக்கு இன்று தவிடுபொடியானது என்று ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் லக்னோவிலுள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது. அதில், பாபர் மசூதி இடிப்பு முன்கூட்டியே திட்டமிடப்பட்டது அல்ல எனவும், அத்வானி உள்ளிட்ட குற்றம் சாட்டப்பட்டவர்கள் பாபர் மசூதி இடிப்பிற்கு காரணமானவர்கள் என சிபிஐ-யால் நிரூபிக்க முடியவில்லை. சிபிஐ வழங்கிய ஒளி மற்றும் ஒலி ஆதாரங்களின் நம்பகத்தன்மையை நிரூபிக்க இயலவில்லை.
அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்டோர் பாபர் மசூதி இடிப்பை தடுக்க முயன்றனர். எனவே பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 32 பேரும் விடுதலை செய்யப்படுவதாக நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
இந்நிலையில் இது குறித்து பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில், காங்கிரஸ் கட்சியால் புனையப்பட்டு அத்வானி ஜி உள்ளிட்ட தேசியத் தலைவர்களையும் தேசிய எழுச்சியையும் முடக்குவதற்காக தொடரப்பட்ட சதி வழக்கு இன்று தவிடுபொடியானது. ஆகவே இந்த புனையப்பட்ட வழக்கில் அனைவரும் விடுவிக்கபட்டுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
சென்னை : பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பாக சென்னையில் பயணிக்க, பெண் ஓட்டுநர்கள் மூலம் 250 'பிங்க் ஆட்டோ' சென்னை…
டெல்லி : ஜெர்மனியின் கார் தயாரிப்பு நிறுவனமான மெர்ஸிடஸ் பென்ஸ் (Mercedes-Benz) AMG G 63 எனும் புதிய வகை…
சிட்னி : இந்தியா மற்றும் ஆஸ்ரேலியா இரண்டு அணிகளும் வருடம்தோறும் மோதிக்கொள்ளும் டெஸ்ட் கிரிக்கெட் தொடரான (பார்டர்-கவாஸ்கர் டிராபி) தொடர் இந்த…
கசான் : ரஷ்யா, தென்னாப்பிர்க்கா, சீனா, இந்தியா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளை உள்ளடக்கிய ‘பிரிக்ஸ்’ கூட்டமைப்பின் மாநாடு 16வது உச்சிமாநாடு…
டெல்லி : வங்கக்கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் நாளை காலை கிழக்கு மத்திய…
நாமக்கல் : அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவானது இன்று நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற முதல்வர் மு.க.…