காங்கிரஸ் அலுவலகத்தை முற்றுகையிட்டு காங்கிரஸ் தொண்டர்கள் போராட்டம்.!

Default Image

திருநெல்வேலிக்கு புதிய மாவட்ட நிர்வாகிகளை நியமித்தது தொடர்பாக காங்கிரஸ் தொண்டர்கள் , சத்யமூர்த்தி பவனை முற்றுகையிட்டு எதிர்ப்பை தெரிவித்தனர். 

வரப்போகும் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் இன்று சென்னை சத்யமூர்த்தி பவனில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

அப்போது, காங்கிரஸ் கட்சி தலைமையானது, திருநெல்வேலி கிழக்கு மாவட்ட செயலாளராக கே.பி.கே.ஜெயக்குமார் அவர்களையும், நாங்குநேரி தொகுதிக்கு உட்பட்ட பழைய 8 வட்டார தலைவர்களையும் நியமித்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருநெல்வேலி, நாங்குநேரி தொகுதி எம்எல்ஏ ரூபி மனோகரன் தலைமையில் காங்கிரஸ் தொண்டர்கள் 100க்கும் மேற்பட்டோர் சத்யமூர்த்தி பவனை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். பின்னர் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி பேச்சுவார்த்தை நடத்திய பிறகு அங்கு சலசலப்பு குறைந்தது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்