மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
இளநிலை மருத்துவ படிப்புகளில் சேர நடத்தப்படும் நீட் நுழைவுத்தேர்வு, இன்று மதியம் 2 மணி முதல் 5 மணி வரை நடைபெற்றது. நீட் தேர்வு அச்சம் காரணமாக மாளவர்கள் பலரும் தற்கொலை செய்து வரும் நிலையில், நீட் தேர்வுகளை ரத்து செய்ய பல்வேறு தலைவர்கள், அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வந்தனர்.
மேலும், நீட் தேர்வுகளை ரத்து செய்யக்கோரி பல இடங்களில் போராட்டங்கள் நடந்து வருகிறது. இந்நிலையில் புதுச்சேரி மாநிலம், மூலக்குளம் பகுதியில் நீட் தேர்வு நடைபெற்ற தனியார் கல்லூரியை அம்மாநில முதல்வர் நாராயணசாமி ஆய்வு செய்தார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்பொழுது அவர், நீட் தேர்வுகளை ரத்து செய்யக்கோரி மத்திய அரசுக்கு பலமுறை கடிதம் எழுதியும் செவிசாய்க்கவில்லை என குற்றம் சாட்டிய அவர், காங்கிரஸ் கட்சி மத்தியில் ஆட்சிக்கு வந்தால், நிச்சியமாக நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.
ஜெய்ப்பூர் : ஐபிஎல் 2025-இன் 36-வது போட்டி இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது.…
ஜெய்ப்பூர் : இந்தியன் பிரீமியர் லீக் 2025 இன் 36வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள்…
கொச்சி : போதைப்பொருள் விவகாரத்தில் கேரளாவில் உள்ள எர்ணாகுளம் காவல் நிலையத்தில் ஆஜரான நடிகர் ஷைன் டாம் சாக்கோ கைது…
சென்னை : மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ இன்று அறிவித்துள்ளார். இந்த…
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியும், குஜராத் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில்…
ஜெய்ப்பூர் : ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இன்று 2 முக்கிய போட்டிகள் நடைபெறுகிறது. GT vs…