காமராஜரின் ஆட்சியை அமைக்க காங்கிரஸ் கட்சியினர் உறுதிமொழி எடுக்க வேண்டும் – கே. எஸ்.அழகிரி

Default Image

தமிழகத்தில் காமராஜரின் ஆட்சியை அமைக்க காங்கிரஸ் கட்சியினர் உறுதிமொழி எடுக்க வேண்டும் என கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். 

தமிழகம் முழுவதும் முன்னாள் முதல்வர் காமராஜரின் 119-வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் தலைமையில், காமராஜர் அரங்கத்திலிருந்து திநகர் நினைவு இல்லம் வரை பேரணி நடைபெறற்து. இந்த பேரணியை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தொடங்கி வைத்தார்.

அப்போது பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தமிழகத்தில் காமராஜரின் ஆட்சியை அமைக்க காங்கிரஸ் கட்சியினர் உறுதிமொழி எடுக்க வேண்டும். காங்கிரஸ் கட்சியினருக்கு அதற்கு குறைந்த எந்த இலக்கும் இருக்கக் கூடாது.

திமுக கூட்டணியில் இருக்கும் போது, எப்படி காங்கிரஸ் ஆட்சி அமைப்பது என சிலருக்கு சந்தேகம் வரலாம். கூட்டணியில் இருக்க கூடிய காரணத்தினால் நாளை நாம் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதில்லை. காங்கிரஸ் ஆட்சிக்கு வருவதற்கான முயற்சிகளை செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்