மாணவி ஒருவர் ஆங்கில பாடல் ஒன்றைப் பாட கே.எஸ்.அழகிரி, தினேஷ் குண்டுராவ் மற்றும் மாணவிகளுடன் ராகுல்காந்தி உற்சாகமாக நடனம் ஆடினார்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில், தமிழக அரசியல் களம் சற்று பரபரப்பாக தான் காணப்படுகிறது, இந்நிலையில், ஒவ்வொரு கட்சி தலைவர்களும் தற்போது தேர்தல் முன்னேற்பாடு பணிகளிலும், தேர்தல் பிரச்சாரத்திலும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி அவர்கள் கடந்த இரு நாட்களாக தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில், இன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது முளகுமூடு பகுதியில் உள்ள பள்ளி மாணவர் ஒருவர் நடனம் ஆட முடியுமா என்று ராகுல் காந்தியிடம் கேட்டார். அதற்கு உடனடியாக சரி என்று பதிலளித்து ராகுல்காந்தி நண்பர்கள் யாராவது மேடைக்கு வாருங்கள் என்று உற்சாகப்படுத்தினார்.
இதனை அடுத்து மூன்று பேர் மேடைக்கு வந்த நிலையில், மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி மற்றும் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் இவரையும் தன்னுடன் நடனமாட அழைத்தார். பின் மாணவி ஒருவர் ஆங்கில பாடல் ஒன்றைப் பாட கே.எஸ்.அழகிரி, தினேஷ் குண்டுராவ் மற்றும் மாணவிகளுடன் ராகுல்காந்தி உற்சாகமாக நடனம் ஆடினார்.
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கைகள் தொடர்பாக கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்று வீட்டுவசதித்துறை மானிய கோரிக்கைகள் நடைபெற்று…
மும்பை : கடந்த வாரம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒரு முக்கிய உத்தரவை பிறப்பித்தார். அமெரிக்கவில் இறக்குமதி ஆகும்…
திருச்சி : இன்று காலை முதலே தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேருவுக்கு தொடர்புடையவர்கள் வீடுகளில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி…
சென்னை : தமிழக பட்ஜெட் 2025-2026 முடிந்து அதன் பிறகு பட்ஜெட் மீதான விவாதம், துறை வாரியாக மானிய கோரிக்கைகள்…
டெல்லி : எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளை மீறி, வக்ஃப் வாரிய திருத்த மசோதா, 2025 மீதான முன்னோடியில்லாத 17 மணி…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…