மாணவி ஒருவர் ஆங்கில பாடல் ஒன்றைப் பாட கே.எஸ்.அழகிரி, தினேஷ் குண்டுராவ் மற்றும் மாணவிகளுடன் ராகுல்காந்தி உற்சாகமாக நடனம் ஆடினார்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில், தமிழக அரசியல் களம் சற்று பரபரப்பாக தான் காணப்படுகிறது, இந்நிலையில், ஒவ்வொரு கட்சி தலைவர்களும் தற்போது தேர்தல் முன்னேற்பாடு பணிகளிலும், தேர்தல் பிரச்சாரத்திலும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி அவர்கள் கடந்த இரு நாட்களாக தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில், இன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது முளகுமூடு பகுதியில் உள்ள பள்ளி மாணவர் ஒருவர் நடனம் ஆட முடியுமா என்று ராகுல் காந்தியிடம் கேட்டார். அதற்கு உடனடியாக சரி என்று பதிலளித்து ராகுல்காந்தி நண்பர்கள் யாராவது மேடைக்கு வாருங்கள் என்று உற்சாகப்படுத்தினார்.
இதனை அடுத்து மூன்று பேர் மேடைக்கு வந்த நிலையில், மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி மற்றும் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் இவரையும் தன்னுடன் நடனமாட அழைத்தார். பின் மாணவி ஒருவர் ஆங்கில பாடல் ஒன்றைப் பாட கே.எஸ்.அழகிரி, தினேஷ் குண்டுராவ் மற்றும் மாணவிகளுடன் ராகுல்காந்தி உற்சாகமாக நடனம் ஆடினார்.
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…
சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…
சென்னை : இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சஞ்சனா, சுவாசிகா ஆகியோர் நடித்துள்ள 'லப்பர்…
ஆந்திரா : ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியில் திருப்பதி கோவிலின் பிரசாத லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர மாநில…