கரூர் மாவட்டத்தில் தர்ணாவில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி மற்றும் நிர்வாகிகளை வலுக்கட்டாயமாக கைது செய்யபட்டுள்ளது.
கரூர் லைட்ஹவுஸ் கார்னர் ரவுண்டானா பகுதியில் காங்கிரசால் அமைக்கப்பட்ட 70 ஆண்டு பழமையான காந்தி சிலையில் பராமரிப்பு பணி என்ற பெயரில் அகற்றப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து இன்று அதிகாலை 6 அடி உயர புதிய காந்தி சிலை அமைக்கப்பட்டுள்ளது. கட்டுமான பணி சரியில்லை எனவும், இதற்கு உரிய அரசாணை வேண்டும் என்று கூறி காங்கிரஸ் எம்பி ஜோதிமணி மற்றும் கரூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் சின்னசாமி உள்ளிட்ட நிர்வாகிகள், திமுக நகர நிர்வாகிகள் என பலர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சுமார் அரை மணி நேரம் தர்ணாவில் ஈடுபட்ட வந்த நிலையில், காவல்துறையினர் கட்டுமான பணிகளை தடுக்க கூடாது எனவும் இல்லையென்றால் கைது செய்வோம் என்று கூறியதற்கு, கைதாக மாட்டோம் என்று கூறி நீண்ட நேரம் தர்ணாவில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. பின்னர் சட்ட ஒழுங்கு பிரச்சனை வரக்கூடும் என்று கூறி கைதாவதற்கு பெண் காவல்துறையினர் மற்றும் காவலர்கள் இணைந்து காங்கிரஸ் எம்பி ஜோதிமணி மற்றும் நிர்வாகிகளை வலுக்கட்டாயமாக கைது செய்து குண்டுக்கட்டாக தூக்கி சென்றனர். இதில் 100க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் கைதாகி உள்ளனர் என தகவல் கூறப்படுகிறது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு இன்று (திங்கட்கிழமை) தொடங்கியது. இதில் கலந்து கொண்டு மத்திய கல்வி…
டெல்லி : இந்த ஆண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு இன்று (திங்கட்கிழமை) தொடங்கியது. இதில்…
ஸ்ரீவைகுண்டம் : தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே பொதுத்தேர்வுக்கு சென்ற 11ஆம் வகுப்பு மாணவனை ஓடும் பஸ்ஸில் மர்ம கும்பல்…
டெல்லி : மும்மொழி கொள்கையை ஏற்றுக்கொண்டால் தான் தமிழ்நாட்டுக்கு நிதி கொடுக்கப்படும் என கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசியது…
டெல்லி : மினி உலகக் கோப்பை என்று பிரபலமாக அழைக்கப்படும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 இன் இறுதிப் போட்டியில்…
சென்னை : கடந்த ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 2) 1 கிராம் தங்கம் ரூ.7,940க்கும், 1 சவரன் தங்கம் ரூ.63,520க்கும் விற்பனையானது. நேற்றைய…