எம்.பி. வசந்தகுமார் மறைவுக்கு முதலமைச்சர் பழனிசாமி இரங்கல்.!

Default Image

எம்.பி. வசந்தகுமாரின் மறைவு காங்கிரஸ் கட்சிக்கும், தொகுதி மக்களுக்கும் பேரிழப்பு – முதல்வர் பழனிசாமி இரங்கல்.

கொரோனாவால் வைரசால் பாதிக்கப்பட்டு சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கன்னியாகுமரி மாவட்டம் காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவரது மறைவுக்கு பல அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார் மறைவுக்கு முதலமைச்சர் பழனிசாமி இரங்கல் தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அதில், ஏழை எளிய மக்களின் கல்வி மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு அரும்பணிகள் ஆற்றிய குமரி தொகுதி எம்.பி. எச்.வசந்தகுமார் அவர்களின் மறைவு காங்கிரஸ் கட்சியினருக்கும், தொகுதி மக்களுக்கும் பேரிழப்பு. எச். வசந்தகுமார் அவர்களின் குடும்பத்தினருக்கும், அவரது கட்சியினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல் என்று கூறியுள்ளார். இவரது மறைவு வேதனையளிக்கிறது என்றும் பொதுவாழ்வில் ஈடுபட்டு மக்களின் அன்பை பெற்றவர். கடின உழைப்பின் மூலம் வாழ்வில் உயர்ந்தவர் என்று புகழாரம் சூட்டியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்