திமுக, காங்கிரஸ் இடையே அதிகாரப்பூர்வமாக தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை தொடங்கியது.
திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவதற்காக கேரளா முன்னாள் முதலமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான உம்மன்சாண்டி நேற்று வருகை தந்தார். நேற்று காங்கிரஸ் மேலிடப்பொறுப்பாளர்கள் ஆலோசனை நடத்தினர். 4 மணி நேரத்திற்கு மேலாக நடந்த ஆலோசனையில் எந்த தொகுதி , எத்தனை தொகுதி என்பது குறித்து விவாதம் செய்யப்பட்டது.
காங்கிரஸ் சார்பில் 30 தொகுதிகள் கேட்க திட்டமிட்டுள்ளதாகவும், ஆனால் திமுக சார்பில் 20 முதல் 25 தொகுதிகள் வரை ஒதுக்குவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், காங்கிரஸ் சார்பில் 2016-ஆம் ஆண்டு வெற்றி பெற்ற 8 இடங்களையும் மீண்டும் கேட்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில், தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், இன்று திமுக, காங்கிரஸ் இடையே முதற்கட்டமாக அதிகாரப்பூர்வமாக தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறுகிறது.
இந்த தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையில் தி.மு.க சார்பில் துரைமுருகன், டி.ஆர்.பாலு, கனிமொழி ஆகியோரும் காங்கிரஸ் சார்பில் உம்மன்சாண்டி, ரன்தீப்சிங் சுர்ஜிவாலா, தினேஷ் குண்டுராவ், கே.எஸ்.அழகிரி ஆகியோரும் கலந்துகொண்டுள்ளனர்.
சென்னை : தமிழ் திரையுலகில் மிகவும் பிரபலமான இசையமைப்பாளர்களில் ஒருவராக திகழ்கிறார் ஏ.ஆர்.ரகுமான். இவரது இசைக்கு மொழிகள் கடந்து உலகம்…
சென்னை : இன்று தமிழ் மாதம் சித்திரை முதல் நாள் தமிழ் புத்தாண்டு தினமாகவும் பலரால் கொண்டாடப்படுகிறது. சித்திரை முதல்…
டெல்லி : நேற்றைய (ஏப்ரல் 13) ஐபிஎல் ஆட்டத்தில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் விளையாடின. இப்போட்டி…
ஜெய்ப்பூர் : இன்றைய ஐபிஎல் தொடரின் ஆட்டத்தில் சஞ்சு தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ரஜத் படிதார் தலைமையிலான ராயல்…
திருவனந்தபுரம் : தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க காலம் தாழ்த்துகிறார், அரசியலமைப்பு சட்ட…
ஜெய்ப்பூர் : இன்றைய ஐபிஎல் தொடரின் ஆட்டத்தில் சஞ்சு தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ரஜத் படிதார் தலைமையிலான ராயல்…