தமிழ் சொந்தங்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் – முதலமைச்சர் பழனிசாமி

Published by
Venu

இனிய தமிழ்நாடு தின நல்வாழ்த்துக்களை பேரன்போடு தெரிவித்துக் கொள்கிறேன் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

1956-ஆம் ஆண்டு நவம்பர் 1-ஆம் தேதி இந்தியா  மொழிவாரி மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டது.எனவே சென்னை மாகாணத்திலிருந்த மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகள் பேசிய பகுதிகளைக் கொண்டு, கேரளா, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா மாநிலங்கள்  பிரிக்கப்பட்டது. சென்னை மாகாணத்தை மொழிவாரியாக பிரித்த நாளான நவம்பர் 1 ஆம் தேதியை தமிழ்நாடு நாளாக கொண்டாடுவதற்கான அரசாணையை தமிழக  அரசு கடந்த  2019 ஆம் ஆண்டு அறிவித்தது.அதன்படி நவம்பர் 1-ஆம் தேதியான இன்று தமிழ்நாடு தினம் கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில் இது குறித்து முதலமைச்சர் பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில்,செந்தமிழாம் தாய்மொழியின் அடிப்படையில் பிரிக்கப்பட்டு, தமிழ்நாடு எனும் பெயர் பெற்ற இந்த நன்னாளில், தமிழின் பெருமையை உலகெங்கும் கொண்டு செல்லும் ஆன்றோர்க்கும், சான்றோர்க்கும், என் அனைத்து தமிழ் சொந்தங்களுக்கும் இனிய தமிழ்நாடு தின நல்வாழ்த்துக்களை பேரன்போடு தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

Published by
Venu

Recent Posts

யார் அந்த தியாகி? “நொந்து போய் நூடுல்ஸ் ஆகிய அதிமுகவினர்” மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்! 

யார் அந்த தியாகி? “நொந்து போய் நூடுல்ஸ் ஆகிய அதிமுகவினர்” மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்!

சென்னை : தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கைகள் தொடர்பாக கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்று வீட்டுவசதித்துறை மானிய கோரிக்கைகள் நடைபெற்று…

14 minutes ago

உலக வர்த்தகத்தையே ஆட்டம் காண வைத்த டிரம்ப்! கடும் சரிவில் இந்திய பங்குச்சந்தை!

மும்பை : கடந்த வாரம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒரு முக்கிய உத்தரவை பிறப்பித்தார். அமெரிக்கவில் இறக்குமதி ஆகும்…

2 hours ago

கே.என்.நேரு இல்லத்தில் ED ரெய்டு, சென்னை, திருச்சியில் தொடரும் தீவிர சோதனை!

திருச்சி : இன்று காலை முதலே தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேருவுக்கு தொடர்புடையவர்கள் வீடுகளில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி…

2 hours ago

Live : தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகள் முதல்.., அமலாக்கத்துறை ரெய்டு வரை…

சென்னை : தமிழக பட்ஜெட் 2025-2026 முடிந்து அதன் பிறகு பட்ஜெட் மீதான விவாதம், துறை வாரியாக மானிய கோரிக்கைகள்…

3 hours ago

சுமார் 17 மணி நேர விவாதம்.., மாநிலங்களவையில் வக்ஃபு வாரிய திருத்த மசோதா சாதனை.!

டெல்லி : எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளை மீறி, வக்ஃப் வாரிய திருத்த மசோதா, 2025 மீதான முன்னோடியில்லாத 17 மணி…

3 hours ago

வங்கக்கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி – வானிலை ஆய்வு மையம்.!

சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…

4 hours ago