நமது மண்ணின் மைந்தனுக்கு வாழ்த்துக்கள் – முதல்வர் பழனிசாமி ட்வீட்.!

Default Image

கேல் ரத்னா விருது வழங்கப்பட்டுள்ள பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற மாரியப்பனுக்கு முதல்வர் பழனிசாமி வாழ்த்துக்கள்.

கடந்த 2016 பிரேசில் பாரா ஒலிம்பிக்கில் உயரம் தாண்டும் போட்டியில் தங்கம் வென்ற மாரியப்பன் தங்கவேல் மற்றும் இந்திய கிரிக்கெட் அணி வீரர் ரோஹித் சர்மா உட்பட 5 பேருக்கு உயரிய விருதான ராஜிவ் கேல் ரத்னா விருது மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 29ம் தேதி காணொளி மூலம் விளையாட்டு வீரர்கள் வீராங்கனைகளுக்கு விருதுகளை வழங்குகிறார் ஜனாதிபதி.

தமிழக வீரர் மாரியப்பனுக்கு பலரும் பாராட்டுகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இதுகுறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், கேல் ரத்னா விருது வழங்கப்பட்டுள்ள, உலக அளவில் பாரா தடகள போட்டிகளில் பல சாதனைகள் புரிந்த, நம் மண்ணின் மைந்தர் மாரியப்பன் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
NZ vs BAN
Ilayaraja Biopic
mp sudha anbumani
Jayalalithaa and pm modi
nzvsban
vidaamuyarchi ott release date