Udhaystalin [Image source : Twitter /@Udhaystalin ]
மருத்துவமனையில் மருத்துவர்கள் இருப்பது எவ்வளவு முக்கியத்துவமா அதே அளவிற்கு செவிலியர்கள் இருப்பதும் முக்கியமான ஒன்று. தங்களுடைய உயிர்களை பணையம் வைத்து பல உயிர்களை காப்பாற்றி வருகிறார்கள் என்று கூறலாம்.
குறிப்பாக கொரோனா காலகட்டத்தில் எல்லாம் காலை, மாலை, இரவு என நேரம் காலம் பார்க்காமல் தன்னுயிரை பணையம் வைத்து பல இன்னுயிர்களை காப்பாற்றினர். இந்நிலையில், இன்று மே 12-ஆம் தேதி உலகம் முழுவதும் உலக செவிலியர்கள் தினம் (InternationalNursesDay) கொண்டாடப்பட்டு வருகிறது.
இதனையடுத்து, அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் டிவிட்டரில் தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது டிவிட்டரில் கூறியதாவது ” மருத்துவத்துறையில் தன்னுயிரை பணயம் வைத்து பல இன்னுயிர்களை காப்பாற்றி வரும் செவிலியர்கள் அனைவருக்கும் #InternationalNursesDayவாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். மக்களைத் தேடி மருத்துவம் போன்ற நம் திராவிட மாடல் அரசின் மகத்தான திட்டங்களின் வெற்றிக்கு முதுகெலும்பாக திகழும் செவிலியர்களுக்கு கழக அரசு என்றும் துணை நிற்கும்” என பதிவிட்டுள்ளார்.
அகமதாபாத் : இன்று ஐபிஎல் 2025 இன் 64வது போட்டி குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…
கர்நாடகா : மைசூர் சாண்டல் சோப்பின் பிராண்ட் அம்பாசிடராக நடிகை தமன்னாவை கர்நாடக அரசு சார்பில், 2 வருடத்திற்கு ரூ.6.20…
அகமதாபாத் : இன்று ஐபிஎல் 2025 இன் 64வது போட்டி குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…
டெல்லி : காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்குப் பிறகு, இந்தியாவில் உள்ள ஐஎஸ்ஐ முகவர்களைச் சுற்றி விசாரணை தீவிரமாக…
கோயம்புத்தூர் : இன்ஸ்டாகிராமில் பிரபலமான வைஷ்ணவி என்கிற கோவையைச் சேர்ந்த இளம் பெண் தவெகவில் உறுப்பினராக இருந்தவர். அண்மையில், தவெகவில்…
மும்பை : பாலிவுட் நடிகர் சல்மான் கானின் வீட்டிற்குள் அடுத்தடுத்த இரண்டு நபர்கள் நுழைய முயன்றுள்ளனர். சல்மானின் வீட்டிற்கு வெளியே…