தமிழகத்தின் புதிய ஆளுநராக பொறுப்பேற்றுள்ள ஆர்.என்.ரவிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் – ஓபிஎஸ்

Published by
பாலா கலியமூர்த்தி

ஆளுநர் பதவியேற்பு விழாவில் பங்கேற்காததற்கு வருத்தம் தெரிவித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம்.

நாகாலாந்து மாநில ஆளுநராக இருந்த ரவீந்திர நாராயண ரவி தமிழக ஆளுநராக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நியமனம் செய்ததை அடுத்து, இன்று நியமித்தார். சென்னை ராஜ்பவனில் தமிழகத்தின் 26-வது ஆளுநராக ஆர்.என்.ரவி பதவி ஏற்றுக்கொண்டார். புதிய ஆளுநராக பொறுப்பேற்றுக்கொண்ட ஆளுநருக்கு அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

அந்தவகையில், தமிழகத்தின் புதிய ஆளுநராக பொறுப்பேற்றுள்ள ஆர்.என்.ரவிக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்து கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தமிழ்நாட்டின் ஆளுநராக நீங்கள் பொறுப்பேற்றதற்கு அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாகவும், எனது சார்பாகவும் மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஒரு சிறந்த வரலாறு மற்றும் வளமான பாரம்பரியத்துடன், எங்கள் புகழ்பெற்ற மாநிலத்திற்கு உங்களை முழு மனதுடன் வரவேற்கிறேன். உங்களின் ஆழ்ந்த ஞானமும், பல வருடங்களாக மத்திய உள்துறை அமைச்சகத்தில் உளவுத்துறையில் பணியாற்றிய அனுபவமும், இந்த புதிய நிலைக்கு பெரிதும் உதவியாக இருக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன், இது மேலும் உயரும் என்றார்.

எனது  மனைவி மறைவிற்கு பிறகு கடந்த இரண்டு வாரங்களாக நான் எனது சொந்த தேனி மாவட்டத்தில் இருப்பதால், சென்னையில் நடந்த ஆளுநர் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள முடியாததற்கு எனது உண்மையான வருத்தம் மற்றும் மன்னிப்பு தெரிவிப்பதாகவும் இன்னும் சில நாட்கள் அங்கு இருக்க வேண்டும் எனவும் நான் சில நாட்களில் சென்னைக்கு வந்து, ஆளுநரை நேரில் சந்தித்து வாழ்த்துவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைவேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே புதிய ஆளுநர் பதவியேற்பு விழாவில் முதல்வர் முக ஸ்டாலின், திமுக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மற்றும் எதிர்க்கட்சி தலைரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் கலந்துகொண்டு ஆளுநருக்கு பொன்னாடை மற்றும் பூங்கொத்து வழங்கி வாழ்த்து தெரிவித்தனர் என்பது குறிப்பித்தக்கது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

போப் பிரான்சிஸ் உடல் நல்லடக்கம்! உலக நாட்டு தலைவர்கள் நேரில் மரியாதை!

போப் பிரான்சிஸ் உடல் நல்லடக்கம்! உலக நாட்டு தலைவர்கள் நேரில் மரியாதை!

வாடிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் மறைந்த போப் பிரான்சிஸின் இறுதி சடங்கு இன்று (ஏப்ரல் 26) காலை வாடிகான்…

10 hours ago

“ஓட்டு மட்டுமே குறிக்கோள் இல்லை., மக்களோடு பேசுங்கள்!” விஜய் கொடுத்த ‘குட்டி’ அட்வைஸ்!

கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கருத்தரங்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது.…

11 hours ago

ஈரான் துறைமுகத்தில் பயங்கர வெடி விபத்து! 300க்கும் மேற்பட்டோர் காயம்!

தெஹ்ரான் : தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் ஷாகித் ராஜீ துறைமுகம் செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று திடீரென…

11 hours ago

தவெக பூத் கமிட்டி கருத்தரங்கில் சிறிய தீ விபத்து? “ஒதுங்கி நில்லுங்கள்!” விஜய் அட்வைஸ்!

கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார்…

12 hours ago

தவெக பூத் கமிட்டி கருத்தரங்கு.., என்ன பேசப்போகிறார் விஜய்?

கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.…

13 hours ago

கட்டாய கடன் வசூல்., 3 ஆண்டுகள் சிறை! புதிய சட்ட மசோதா விவரங்கள் இதோ…

சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…

15 hours ago