பஞ்சாப் மாநிலத்தில் பிப்.20 ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற்றது. பஞ்சாப் மாநிலத்தின் 117 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 92 இடங்களில் ஆம் ஆத்மி வெற்றி பெற்றது. இந்த தேர்தலில், பஞ்சாபின் துரி தொகுதியில், ஆம் ஆத்மி கட்சி சார்பில் போட்டியிட்ட முதல்வர் வேட்பாளர் பகவந்த் மான் வெற்றி பெற்றார்.
இந்த நிலையில்,ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் பஞ்சாப் முதல்வராக பகவந்த் மான் இன்று (மார்ச் 16-ஆம் தேதி) பதவியேற்கிறார். அவர் கூறியபடி சுதந்திர போராட்ட வீரரான பகத்சிங் பிறந்த ஊரான கட்கர் கலானில் பதவி ஏற்பு விழா நடைபெறவுள்ளது. சுமார் 3 லட்சம் பேர் இவ்விழாவில் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக, 50 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும்,வாகனங்களை நிறுத்துவதற்காக 50 ஏக்கர் நிலம் தயார் நிலையில் உள்ளது. மேலும்,10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், பஞ்சாப் முதல்வராக பொறுப்பேற்க உள்ள பகவந்த் மானுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். அந்த பதிவில், பஞ்சாப் முதல்வராக இன்று பதவியேற்கும் பகவந்த் மானுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
தமிழ்நாடு மற்றும் பஞ்சாப் ஆகியவை இந்திய யூனியனில் மொழிவாரி உரிமைகள் மற்றும் மாநில உரிமைகள் பற்றி குரல் கொடுத்த நீண்ட வரலாற்றைப் பகிர்ந்து கொள்கின்றன. பஞ்சாபில் புதிய அரசாங்கம் வெற்றியடைய வாழ்த்துக்கள்.’ என பதிவிட்டுள்ளார்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…