ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவர் ஹேமந்த் சோரன் ஜார்க்கண்ட் மாநிலத்தின் 11- வது முதலமைச்சராக பதவியேற்றார். ராஞ்சியில் நடைபெறும் விழாவில் ஹேமந்த் சோரனுக்கு அம்மாநில ஆளுநர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
இந்த பதவியேற்பு விழாவில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் டி.ராஜா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இந்நிலையில் இதன் பின்பு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.அவரது பதிவில், ஹேமந்த் சோரனின் பதவியேற்பு விழாவில் பங்கேற்றதில் மகிழ்ச்சி அடைகிறேன். மதவாத சக்திகளுக்கு எதிராக போராடி, சமூக நீதியை நிலைநாட்ட வேண்டிய மிகப் பெரிய பொறுப்பு மதச்சார்பற்ற கட்சிகளுக்கு உள்ளது.
இந்தப் போராட்டத்துக்காக மதச்சார்பற்ற அனைத்துக் கட்சிகளுக்கு இடையே ஒற்றுமையும், ஒருங்கிணைப்பும் அவசியம். ஜார்க்கண்டில் பொறுப்பேற்றுள்ள புதிய அரசு சிறப்பாக செயல்பட வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார்.
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…
டெல்லி : தவறான தகவல்களைப் பரப்பியதற்காக சீனாவின் Global Times, Xinhua ஆகியவை தொடர்ந்து துருக்கி அரசின் பிரபல செய்தி…
சென்னை : நடிகர் சந்தானத்தின் வரவிருக்கும் படமான 'டிடி நெக்ஸ்ட் லெவல்' படத்தின் 'கிஸ்ஸா 47' பாடலில் 'ஸ்ரீனிவாச கோவிந்தா'…
டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர்கள் ரஹானே, ரோஹித், விராட் கோலி ஆகியோர் அடுத்தடுத்ததாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தது…
சென்னை : திருச்சி சரகத்தில் 40 காவல் ஆய்வாளர்கள் (இன்ஸ்பெக்டர்கள்) பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். வெளியாகியுள்ளது. மேலும், புதுக்கோட்டை மாவட்டத்தில்…