கொரோனா இல்லாத என் குடும்பத்தை அசிங்கப்படுத்தியதற்கு வாழ்த்துக்கள் – கோவையில் பேனர்!

Published by
Rebekal
கொரோனா இல்லாத எனது குடும்பத்தை அசிங்கப்படுத்தியதற்கு வாழ்த்துக்கள் என மாநகராட்சிக்கு பேனர் வைக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதிலும் கொரானா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் செல்கிறது. இந்நிலையில் அரசு மக்களை இந்த பெருந்தொற்றில் இருந்து பாதுகாப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இந்நிலையில், கோவையில் உள்ள ஹோப் காலேஜ் எனும் பகுதியை சேர்ந்த ஒருவர் கடந்த 25ஆம் தேதி கொரோனா காரணமாக உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவரது குடும்பத்தில் உள்ள ஐந்து பேருக்கு மாநகராட்சி சார்பில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் நான்கு பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாக கூறி அந்த குடும்பத்தின் முன் வீட்டின் முன்புறம் தகரம் அடித்து தனிமைப்படுத்தப்பட்ட பகுதி என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் அந்த வீட்டினர் மீண்டும் தனியார் மருத்துவமனையில் இது குறித்து சோதனை மேற்கொண்ட பொழுது, அவர்கள் நால்வருக்குமே கொரோனா இல்லை என சான்று வழங்கப்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த குடும்பத்தினர் கோவை மாநகராட்சியை கண்டித்து வினோதமான முறையில் பேனர் வைத்துள்ளனர். அதில் கொரோனா இல்லாத 4 பேருக்கு இருக்கு என்று முத்திரை குத்தி என்னையும் எனது குடும்பத்தினரையும் அசிங்கப்படுத்தியதற்கு வாழ்த்துக்கள் எனக் கூறி தனியார் மருத்துவமனையில் கொடுக்கப்பட்ட சான்றிதழையும் கீழே அச்சடித்து பேனர் ஒன்று வீட்டின் முன்பாக மாட்டியுள்ளனர். இது குறித்து மருத்துவர்கள் ஒருவர் கூறுகையில், கொரோனா  உறுதி செய்யப்பட்டவர்கள் 4-5 தினத்திற்கு பின்பு மறு பரிசோதனை செய்தால் கொரோனா நோய் தொற்று இல்லை என்று வருவது இயல்பானது தான் எனவும், இருந்தாலும் சம்பந்தப்பட்ட நபர்களை தனிமைப்படுத்தி கொள்வது அவசியம் எனவும் கூறியுள்ளார்.
Published by
Rebekal

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

4 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

6 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

6 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

6 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

6 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

7 hours ago