காங்கிரஸ் கட்சி அழிவது காங்கிரஸ் கட்சி காரர்களாளே என காங்., கட்சியின் தமிழக தலைவர் கூறியுள்ளது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக காங்கிரஸ் கட்சியின் இலக்கிய அணி சார்பில் 2 நாள் அரசியல் பயிலரங்கம் கன்னியாகுமரி ரயில் நிலையம் அருகே உள்ள வரலாற்றுக் கூடத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட காங்கிரஸ் கட்சியின் தமிழகத் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியதாவது, காங்கிரஸ் கட்சியை மிகவும் கீழ்த்தரமான வார்த்தைகளால் விமர்சனம் செய்யும் சீமான், வைகோ போன்றவர்களுக்கு எதிராக காங்கிரஸ் தொண்டர்கள் பிரச்னைகளிலோ அல்லது கலவரங்களிலோ ஈடுபடுவதில்லை. ஆனால், உள்கட்சி கூட்டங்கள் என்று வரும்போது ஒருவரை ஒருவர் மண்டை உடைந்து ரத்தம் வரும் அளவுக்கு கடுமையாக மோதிக்கொள்கின்றனர். இதுபோன்ற சம்பவங்களால்தான் காங்கிரஸ் கட்சி மோசமான நிலையில் உள்ளது என்றார்.அவரது இந்த பேச்சு அங்கிருந்த நிர்வாகிகள் மத்தியில் திடீர் சலசலப்பை ஏற்படுத்தியது. மேலும் இந்த பேச்சு வைகோ, சீமான் போன்றொர்களுக்கு எதிராக கட்சியினரை திருப்பிவிடும் நோக்கில் உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். வண்முறையை விரும்பாத காந்தியின் காங்கிரஸ் தற்போது தடம் மாறுகிறதோ என்ற சந்தேகம் வலுக்கிறது.
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…
சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…
சென்னை : விழுப்புரம் விக்கிரவாண்டியில் அக்.27ல் தவெக மாநாடு நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக…
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…