காங்., கட்சியை தவறாக பேசும் வைகோ, சீமான் இவர்களை விட்டுவிட்டு உங்களுக்குள் ஏன் மோதிக்கொள்கிறீர்கள்.. கே.எஸ்.அழகிரி ஆவேசம்..

Default Image

காங்கிரஸ் கட்சி அழிவது காங்கிரஸ் கட்சி காரர்களாளே என காங்., கட்சியின் தமிழக தலைவர் கூறியுள்ளது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக காங்கிரஸ் கட்சியின் இலக்கிய அணி சார்பில் 2 நாள் அரசியல் பயிலரங்கம் கன்னியாகுமரி ரயில் நிலையம் அருகே உள்ள வரலாற்றுக் கூடத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட காங்கிரஸ் கட்சியின் தமிழகத் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியதாவது,  காங்கிரஸ் கட்சியை மிகவும் கீழ்த்தரமான வார்த்தைகளால் விமர்சனம் செய்யும் சீமான், வைகோ போன்றவர்களுக்கு எதிராக காங்கிரஸ் தொண்டர்கள் பிரச்னைகளிலோ அல்லது கலவரங்களிலோ ஈடுபடுவதில்லை. ஆனால், உள்கட்சி கூட்டங்கள் என்று வரும்போது ஒருவரை ஒருவர் மண்டை உடைந்து ரத்தம் வரும் அளவுக்கு கடுமையாக  மோதிக்கொள்கின்றனர். இதுபோன்ற சம்பவங்களால்தான் காங்கிரஸ் கட்சி மோசமான நிலையில் உள்ளது என்றார்.அவரது இந்த பேச்சு அங்கிருந்த நிர்வாகிகள் மத்தியில் திடீர் சலசலப்பை ஏற்படுத்தியது. மேலும் இந்த பேச்சு வைகோ, சீமான் போன்றொர்களுக்கு எதிராக கட்சியினரை திருப்பிவிடும் நோக்கில் உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். வண்முறையை விரும்பாத காந்தியின் காங்கிரஸ் தற்போது தடம் மாறுகிறதோ என்ற சந்தேகம் வலுக்கிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்