தோழர் இரா.ஜவகர் கொரோனாவால் இறப்பு;முதல்வர் ஸ்டாலின் இரங்கல்..!

Published by
Edison

மூத்த பத்திரிகையாளரும்,இடதுசாரி சிந்தனையாளருமான தோழர் இரா.ஜவகர் இன்று அதிகாலையில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்த நிலையில்,முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

மூத்த பத்திரிகையாளரும்,இடதுசாரி சிந்தனையாளருமான தோழர் இரா.ஜவகர்,மகளிர்தினம் உண்மை வரலாறு உள்ளிட்ட பல்வேறு நூல்களை எழுதியுள்ளார்.மேலும்,அவர் எழுதிய,”கம்யூனிசம்-நேற்று இன்று நாளை” எனும் நூல் அதிக பிரதிகளை விற்று சாதனை படைத்தது.

இந்நிலையில்,தோழர் இரா.ஜவகர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில்,சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை தோழர் இரா.ஜவகர் உயிரிழந்தார்.

இதனையடுத்து,அவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்து,தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியிருப்பதாவது,”மூத்த பத்திரிக்கையாளரும், பொதுவுடைமைச் சிந்தனையாளருமான திரு.இரா.ஜவகர் அவர்கள் மறைவுற்ற செய்தியறிந்து பெரிதும் வேதனை அடைந்தேன்.அவரது மறைவு முற்போக்கு சிந்தனை உலகிற்குப் பேரிழப்பாகும்.

இளம் பத்திரிகையாளர்களுக்கு வழிகாட்டியாகத் திகழ்ந்த இரா.ஜவகர் அவர்கள்,அரிய நூல்களைப் படைத்தளித்தவர் என்பதுடன்,தலைவர் கலைஞர் மீது மிகுந்த மரியாதையும்,மாறாத பற்றும் கொண்டவர்.

அவரது மறைவால் வாடும் குடும்பத்தினர்,நண்பர்கள், பத்திரிக்கையாளர்கள்,பொதுவுடைமை இயக்கத் தோழர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும்,ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்”,என்று கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து,மறைந்த தோழர் இரா.ஜவகர் அவர்களின் குடும்பத்தினர்க்கு,பத்திகையாளர்கள்,அரசியல் தலைவர்கள் போன்றோர் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

முன்னதாக,தோழர் இரா.ஜவகர் அவர்களின் மனைவியான பேராசிரியர் பூரணம் அவர்களும்,கடந்த ஆண்டு 14.9.2020 இல் கொரோனாவால்தான் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
Edison

Recent Posts

MI vs LSG: பவுலிங்கில் மிரட்டிய பும்ரா.., திணறிய லக்னோ.! மும்பை அணி அபார வெற்றி.!

மும்பை : மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் 2025 - இன் 45வது…

6 hours ago

”தவெக ஆட்சியில் ஊழல் இருக்காது.,, சிறுவாணி தண்ணீர் போல ஆட்சியை அமைப்போம்” – விஜய்.!

குரும்பபாளையம் : கோவையில் நேற்றைய தினத்தை தொடர்ந்து, இன்றும் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக (தவெக) பூத் கமிட்டி கருத்தரங்கம்,…

7 hours ago

“புரட்சி உருவாகிக் கொண்டிருக்கிறது.., தேர்தல் முகவர்கள் சக்தி வாய்ந்தவர்கள்” – ஆதவ் அர்ஜுனா.!

சரவணம்பட்டி : கோவையில் 2ஆம் நாளாக இன்று (ஏப்.27) தவெக வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கு நடைபெறுகிறது. குரும்பபாளையத்தில் உள்ள கல்லூரி…

7 hours ago

கோவையே அதிருது.., “யாரையும் பணம் கொடுத்து கூப்பிடவில்லை” – என்.ஆனந்த்.!

கோவை : தவெக தலைவர் விஜய், கோவையில் இன்று இரண்டாவது நாளாக ரோட் ஷோவில் ஈடுபட்டுள்ளார். சரவணம்பட்டியில் நேற்று பூத்…

7 hours ago

MIv s LSG: ரிக்கல்டன் – சூர்யகுமாரின் வெறித்தனமான ஆட்டம்.., மிரண்டு போன லக்னோவுக்கு பெரிய இலக்கு.!

மும்பை : ஐபிஎல் 2025 இன் 45வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…

8 hours ago

“இந்தியாவை தாக்க 130 அணுகுண்டுகள் தயார்” – பாகிஸ்தான் அமைச்சர் பரபரப்பு எச்சரிகை.!

ராவல்பிண்டி : 26 பேர் கொல்லப்பட்ட பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தொடர்ச்சியான எதிர் நடவடிக்கைகளை…

9 hours ago