தோழர் இரா.ஜவகர் கொரோனாவால் இறப்பு;முதல்வர் ஸ்டாலின் இரங்கல்..!

Published by
Edison

மூத்த பத்திரிகையாளரும்,இடதுசாரி சிந்தனையாளருமான தோழர் இரா.ஜவகர் இன்று அதிகாலையில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்த நிலையில்,முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

மூத்த பத்திரிகையாளரும்,இடதுசாரி சிந்தனையாளருமான தோழர் இரா.ஜவகர்,மகளிர்தினம் உண்மை வரலாறு உள்ளிட்ட பல்வேறு நூல்களை எழுதியுள்ளார்.மேலும்,அவர் எழுதிய,”கம்யூனிசம்-நேற்று இன்று நாளை” எனும் நூல் அதிக பிரதிகளை விற்று சாதனை படைத்தது.

இந்நிலையில்,தோழர் இரா.ஜவகர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில்,சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை தோழர் இரா.ஜவகர் உயிரிழந்தார்.

இதனையடுத்து,அவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்து,தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியிருப்பதாவது,”மூத்த பத்திரிக்கையாளரும், பொதுவுடைமைச் சிந்தனையாளருமான திரு.இரா.ஜவகர் அவர்கள் மறைவுற்ற செய்தியறிந்து பெரிதும் வேதனை அடைந்தேன்.அவரது மறைவு முற்போக்கு சிந்தனை உலகிற்குப் பேரிழப்பாகும்.

இளம் பத்திரிகையாளர்களுக்கு வழிகாட்டியாகத் திகழ்ந்த இரா.ஜவகர் அவர்கள்,அரிய நூல்களைப் படைத்தளித்தவர் என்பதுடன்,தலைவர் கலைஞர் மீது மிகுந்த மரியாதையும்,மாறாத பற்றும் கொண்டவர்.

அவரது மறைவால் வாடும் குடும்பத்தினர்,நண்பர்கள், பத்திரிக்கையாளர்கள்,பொதுவுடைமை இயக்கத் தோழர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும்,ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்”,என்று கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து,மறைந்த தோழர் இரா.ஜவகர் அவர்களின் குடும்பத்தினர்க்கு,பத்திகையாளர்கள்,அரசியல் தலைவர்கள் போன்றோர் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

முன்னதாக,தோழர் இரா.ஜவகர் அவர்களின் மனைவியான பேராசிரியர் பூரணம் அவர்களும்,கடந்த ஆண்டு 14.9.2020 இல் கொரோனாவால்தான் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
Edison

Recent Posts

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…

6 seconds ago

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…

8 hours ago

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

20 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

1 day ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

1 day ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

1 day ago