தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் எனது அரசியல் பேரவை 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது என்று ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் அறிவிப்பு.
கடந்த மாதம் 21-ஆம் தேதி இளைஞர்களின் கோரிக்கையை ஏற்று தான் அரசியலுக்கு வருகிறேன் என்று விருப்ப ஓய்வுபெற்ற முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சகாயம் தனது அரசியல் நிலைப்பாட்டை அறிவித்திருந்தார். இந்த நிலையில் இன்று சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சகாயம், சகாயம் அரசியல் பேரவை, தமிழ்நாடு இளைஞர் கட்சி, வளமான தமிழகம் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து மொத்தம் 36 தொகுதிகளில் போட்டியிடும் என தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் சகாயம் அரசியல் பேரவை 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது என்றும் அறிவித்துள்ளார். சகாயம் அரசியல் பேரவை போட்டியிடும் 20 தொகுதிகளின் 10 தொகுதிகளுக்கான முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளார். சகாயம் அரசியல் பேரவையுடன் இணைந்து தமிழ்நாடு இளைஞர் கட்சி 15 தொகுதிகளிலும், வளமான தமிழகம் 1 தொகுதிகளிலும் வரும் தேர்தலில் போட்டியிடுவதாக தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி விட்டதால் புதிய கட்சி, புதிய சின்னம் பெற நேரம் இல்லாத சூழலில், கூட்டணியில் இருக்கும் 2 கட்சிகளின் சின்னத்தில் எங்களது இளைஞர்கள் களம் காண்பார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த தேர்தலுக்கு பிறகு அரசியல் கட்சி குறித்த முழுமையான நடவடிக்கைகள் இருக்கும் என்றும் வரும் தேர்தலில் நான் போட்டியிடவில்லை எனவும் ஐஏஎஸ் அதிகாரி சகாயம் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான [செப்டம்பர் 23]எபிசோடில் சத்யாவின் வீடியோவை பார்த்த ரோகினி மகிழ்ச்சி அடைகிறார்.. முத்துவின் செல்லை…
சென்னை : நடிகர் கார்த்தி, அரவிந்த் சாமி மற்றும் ஸ்ரீ திவ்யா நடித்துள்ள "மெய்யழகன்" படத்தை சி.பிரேம்குமார் எழுதி இயக்கியுள்ளார்.…
அனந்தபூர் : இந்திய உள்ளூர் தொடரான துலிப் ட்ராபி தொடர் கடந்த செப்-5 ம் தேதி அன்று தொடங்கியது. 3…
திருப்பதி : ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் தேவஸ்தான லட்டுகளில் விலங்கின் கொழுப்புகள் கலந்ததாக சமீபத்திய…
சென்னை : வார தொடக்க நாளான இன்று ஆபரணத் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. தங்கம் விலை தொடர்ந்து…
புதாபெஸ்ட் : ஹங்கேரியில் நடைபெற்று வந்த இந்த ஆண்டிற்க்கான மற்றும் 45-வது செஸ் ஒலிம்பியாட் தொடரின், ஓபன் பிரிவில் இந்திய…