நிவர் புயல்: பேரிடர் மேலாண்மை விதிகளுக்குட்பட்டு இழப்பீடு வழங்கபடும்- அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்!

Published by
Surya

நிவர் புயலால் 36 மாவட்டங்களில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து கணக்கீடு செய்து, நிவாரணம் வழங்கப்படும் என அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தெரிவித்துள்ளார்.

கடந்த 21 ஆம் தேதி, வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, வலுவடைந்துகொண்டே புயலாக உருமாறியது. அதனைதொடர்ந்து மேற்கு திசையில் மெதுவாக நகர்ந்துகொண்டே வந்து, தீவிர புயலாக மாறியது. இதனையடுத்து நேற்று மாலை காரைக்கால் மற்றும் மகாபலிபுரம் புதுச்சேரி இடையே புதுச்சேரியில் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

இதனையடுத்து அதி தீவிரப்புயலாக வலுப்பெற்று, புதுச்சேரி அருகே நேற்று இரவு 11:30 மணிக்கு கரையை கடக்க தொடங்கி, நள்ளிரவு 2:30 மணிக்கு முழுவதுமாக கரையை கடந்தது. மேலும் இந்த புயல், வடக்கு – வடகிழக்கு திசையில் நகர்கிறதாகவும், 6 மணிநேரத்தில் மேலும் வலுவிழந்து, புயலாக வலுவிழக்கும். இதனால் வட தமிழகத்தில் மழை தொடரும் எனவும், காற்று சற்று வேகமாக வீசக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிகர் புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகாத நிலையில், விடிந்தபின் அவையனைத்தும் தெரியவரும். இந்தநிலையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், புயல் தொடங்கியது முதல் அரசுக்கு மக்கள் 100 சதவித ஒத்துழைப்பு கொடுத்துள்ளதாக கூறினார். மேலும் பேசிய அவர், புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருவதாகவும், அவசர கட்டுப்பாட்டு அறையின் செயல்பாடுகள் அனைத்தும் தொடரும் என தெரிவித்தார்.

அதுமட்டுமின்றி, நிவர் புயலால் 36 மாவட்டங்களில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து கணக்கீடு செய்து நிவாரணம் வழங்கப்படும் என தெரிவித்த அமைச்சர், பயிர் சேதத்திற்கு காப்பீடு, இழப்பீடு பேரிடர் மேலாண்மை விதிகளுக்கு உட்பட்டு நிவாரணத் தொகை வழங்கபடும் எனவும் தெரிவித்தார். மேலும் இந்த புயல் தாக்கம் காரணமாக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்து வரும் நிலையில், மாநில வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம், புயல் கால அவசர உதவி எண்களை அறிவித்துள்ளது. அதன்படி மாநில அளவில் அவசர உதவி எண் 1070 என்றும், மாவட்ட அளவில் 1077 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது

Published by
Surya

Recent Posts

முடி இருக்காது ப்ரோ….கடுப்பாகி திக்வேஷ் ரதியை எச்சரித்த அபிஷேக் ஷர்மா!முடி இருக்காது ப்ரோ….கடுப்பாகி திக்வேஷ் ரதியை எச்சரித்த அபிஷேக் ஷர்மா!

முடி இருக்காது ப்ரோ….கடுப்பாகி திக்வேஷ் ரதியை எச்சரித்த அபிஷேக் ஷர்மா!

லக்னோ : மே 19, 2025 அன்று லக்னோவில் நடந்த ஐபிஎல் 2025 போட்டியில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (எஸ்ஆர்எச்) மற்றும் லக்னோ…

2 hours ago
வெளுத்து வாங்கிய கனமழை! 3 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!வெளுத்து வாங்கிய கனமழை! 3 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

வெளுத்து வாங்கிய கனமழை! 3 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

சென்னை : மே 16 முதல் 19, 2025 வரை தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி, தர்மபுரி, மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் இடி…

3 hours ago
போர் நிறுத்தத்தில் அமெரிக்காவுக்கு எந்த பங்கு இல்லை – விக்ரம் மிஸ்ரி விளக்கம்!போர் நிறுத்தத்தில் அமெரிக்காவுக்கு எந்த பங்கு இல்லை – விக்ரம் மிஸ்ரி விளக்கம்!

போர் நிறுத்தத்தில் அமெரிக்காவுக்கு எந்த பங்கு இல்லை – விக்ரம் மிஸ்ரி விளக்கம்!

டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இடையே நடந்த போர் நின்றதற்கு நான் தான் காரணம் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப்…

4 hours ago
12 மாவட்டத்துக்கு கனமழை…அந்த 1 மாவட்டத்திற்கு மிக கனமழை…வானிலை மையம் அலர்ட்!12 மாவட்டத்துக்கு கனமழை…அந்த 1 மாவட்டத்திற்கு மிக கனமழை…வானிலை மையம் அலர்ட்!

12 மாவட்டத்துக்கு கனமழை…அந்த 1 மாவட்டத்திற்கு மிக கனமழை…வானிலை மையம் அலர்ட்!

சென்னை : மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. …

5 hours ago
ரிஷப் பண்ட் உங்க பாணியை மாத்தாதீங்க…ஜடேஜா முக்கிய அட்வைஸ்!ரிஷப் பண்ட் உங்க பாணியை மாத்தாதீங்க…ஜடேஜா முக்கிய அட்வைஸ்!

ரிஷப் பண்ட் உங்க பாணியை மாத்தாதீங்க…ஜடேஜா முக்கிய அட்வைஸ்!

லக்னோ : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் மிகவும் சொதப்பலான ஆட்டத்தை…

5 hours ago
கொரோனா கட்டுக்குள் இருக்கு…மக்கள் பயப்படவேண்டாம்! மத்திய அரசு விளக்கம்!கொரோனா கட்டுக்குள் இருக்கு…மக்கள் பயப்படவேண்டாம்! மத்திய அரசு விளக்கம்!

கொரோனா கட்டுக்குள் இருக்கு…மக்கள் பயப்படவேண்டாம்! மத்திய அரசு விளக்கம்!

டெல்லி : கொரோனா வைரஸ் தொற்று உலகளவில் 2020 முதல் பரவி கொண்டு பெரும் அச்சத்தை ஏற்படுத்திக்கொண்டு வருகிறது. இதனால்…

6 hours ago