இலக்கிய மாமணி விருதுக்கு தகுதியானவர்களை தேர்வு செய்வதற்கு குழு அமைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு.
இலக்கிய மாமணி’ விருதுக்கு தகுதியானோரை தேர்வு செய்ய குழு அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் குழு அமைத்து உத்தரவு பிறப்பித்துள்ளது. உறுப்பினர் செயலராக தமிழ் வளர்ச்சித்துறை இயக்குனர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இதனிடையே, மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 97வது பிறந்த நாள் விழாவில், தமிழறிஞர் மூவருக்கு, ‘இலக்கிய மாமணி’ விருது வழங்கப்படும் என முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்திருந்தார். இயல், இசை, நாடகத்தில் சிறந்த விளங்கும் கலைஞர்களுக்கு தமிழ் நாடு அரசின் சார்பாக கலைமாமணி விருது வழங்கப்பட்டு வருகிறது.
அதேபோல் தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவித்து சிறப்பிக்கும் வகையில் இலக்கிய மாமணி விருது உருவாக்கப்பட்டு தமிழின் இலக்கியத்திற்கு வளம் சேர்க்கும் எழுத்தாளர்கள் மூன்று பேருக்கு ஆண்டுதோறும் இந்த விருது வழங்கப்படும். இந்த விருதை வழங்கும் வகையில், தகுதியானோரை தேர்வு செய்ய குழுவும் அமைக்கப்பட்டது.
‘இலக்கிய மாமணி’ விருதுடன் தலா ரூ.5 லட்சம், பாராட்டு சான்றிதல் மற்றும் பதக்கம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இலக்கிய மாமணி விருதுக்கு தகுதியானவர்களை தேர்வு செய்வதற்கு குழு அமைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : சட்ட விரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் சோனியா காந்தி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மீது…
சண்டிகர் : ஐபிஎல் தொடரின் இன்றைய மேட்சில், பஞ்சாப் மற்றும் கொல்கத்தா அணிகள் முல்லன்பூர் மைதானத்தில் மோதுகின்றன. இரு அணிகளும்…
சென்னை : சாட்டை துரைமுருகன் நடத்தி வரும் யூடியூப் சேனலுக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும், சாட்டை துரைமுருகன்…
சென்னை : முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் வருகின்ற ஏப்ரல் 17ம் தேதி அன்று தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் சென்னை…
மும்பை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி புள்ளி விவரப்பட்டியலில் 8-வது இடத்தில் இருப்பது என்பது ரசிகர்களுக்கு ஒரு…
உத்திர பிரதேஷ் : மாநிலம் ஹர்தோய் நகரில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட முதல்வர் யோகி ஆதித்தியநாத் மேற்கு…