இலக்கிய மாமணி விருதுக்கு தகுதியானவர்களை தேர்வு செய்வதற்கு குழு அமைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு.
இலக்கிய மாமணி’ விருதுக்கு தகுதியானோரை தேர்வு செய்ய குழு அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் குழு அமைத்து உத்தரவு பிறப்பித்துள்ளது. உறுப்பினர் செயலராக தமிழ் வளர்ச்சித்துறை இயக்குனர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இதனிடையே, மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 97வது பிறந்த நாள் விழாவில், தமிழறிஞர் மூவருக்கு, ‘இலக்கிய மாமணி’ விருது வழங்கப்படும் என முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்திருந்தார். இயல், இசை, நாடகத்தில் சிறந்த விளங்கும் கலைஞர்களுக்கு தமிழ் நாடு அரசின் சார்பாக கலைமாமணி விருது வழங்கப்பட்டு வருகிறது.
அதேபோல் தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவித்து சிறப்பிக்கும் வகையில் இலக்கிய மாமணி விருது உருவாக்கப்பட்டு தமிழின் இலக்கியத்திற்கு வளம் சேர்க்கும் எழுத்தாளர்கள் மூன்று பேருக்கு ஆண்டுதோறும் இந்த விருது வழங்கப்படும். இந்த விருதை வழங்கும் வகையில், தகுதியானோரை தேர்வு செய்ய குழுவும் அமைக்கப்பட்டது.
‘இலக்கிய மாமணி’ விருதுடன் தலா ரூ.5 லட்சம், பாராட்டு சான்றிதல் மற்றும் பதக்கம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இலக்கிய மாமணி விருதுக்கு தகுதியானவர்களை தேர்வு செய்வதற்கு குழு அமைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பிரிஸ்டல் : இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்று வந்த ஒரு நாள் தொடரின் கடைசி போட்டி இன்று…
சென்னை : தமிழக அமைச்சரவையில் நேற்று அனைவரும் எதிர்பார்தத பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. குறிப்பாக, திமுகவினர் அதிகம் எதிர்நோக்கி காத்திருந்த…
சென்னை : நீண்ட நாட்களாக கூறப்பட்டு வந்த தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம் குறித்த முக்கிய அறிவிப்பு நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியானது.…
மும்பை : இந்த ஆண்டின் இறுதியில் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது நடைபெற இருக்கிறது. கடந்த 2 மாதங்களாக…
சென்னை : கடந்த சில வாரங்களாகவே தமிழகத்தில், அமைச்சரவை மாற்றம் தொடர்பான விஷயங்கள் தான் பெரிதும் பேசும் பொருளாகவே இருந்து…
லார்ட்ஸ் : இங்கிலாந்து அணியின் முக்கிய தூணாக விளங்கும் வேக பந்து வீச்சாளரான ஜோப்ரா ஆர்ச்சர் கடந்த 2019 உலகக் கோப்பை…