மதத்தின் அடிப்படையில் பகைமை அல்லது பொது அமைதியை குலைப்போர் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை.
சென்னை கீழ்ப்பாக்கத்தில் சேர்ந்த இளங்கோவன் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பாஜக இளைஞரணி தலைவர் வினோத் பி.செல்வம் அவரது ட்விட்டர் பக்கத்தில் பொய்யான தகவலை மக்களிடையே பரப்பும் நோக்கில் கருத்துக்களை பதிவிட்டுள்ளதாகவும், இந்த பதிவானது மதத்தின் அடிப்படையில் மக்களிடையே வெறுப்பையும், பகையையும் உருவாக்கி பொது அமைதியை குலைக்கும் வகையில் இருப்பதாகவும், எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறும் தெரிவித்திருந்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் வினோத் பி.செல்வம் மீது கலகம் செய்ய தூண்டிவிடுதல், அரசுக்கு எதிராக, பொது அமைதிக்கு எதிராக எந்த ஒரு நபரையும் குற்றம் செய்யத் தூண்டுதல் உட்பட மூன்று பிரிவுகளின் கீழ் மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இதனையடுத்து சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால், மதத்தின் அடிப்படையில் பகைமை அல்லது பொது அமைதியை குலைப்போர் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பொய்யான செய்திகள், உண்மை செய்திகளை திரித்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.
சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில் பிரசாதமாக வாங்கிச் செல்லும்…
நாட்டிங்ஹாம் : இங்கிலாந்து நாட்டில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் மற்றும் 5 ஒரு…
சென்னை : இசையமைப்பாளராக நம்மளுடைய மனதை கவர்ந்த ஹிப் ஹாப் ஆதி தன்னுடைய முதல் படமான மீசையை முறுக்கு படத்தின்…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்ற பேச்சுக்கள் தற்போது தமிழக…
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…