மனித உரிமை ஆணையத்தில் காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு.
சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற மாநில மனித உரிமை ஆணைய வெள்ளி விழாவில் சிறப்பு விருந்தினராக முதலமைச்சர் முக ஸ்டாலின் பங்கேற்றார். அப்போது மனித உரிமை ஆணையத்தின் சார்பில் சிறப்பு நூலை முதல்வர், மனித உரிமை மீறல் புகார்களை சிறப்பாக கையாண்ட மாவட்ட ஆட்சியர்கள், எஸ்பிக்களுக்கு பரிசு மற்றும் விருதுகளை வழங்கினார்.
இதன்பின் இந்நிகழ்வில் பேசிய முதலமைச்சர், தமிழகத்தில் 1997-ஆம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி தான் மனித உரிமை ஆணையத்தை அமைத்தவர். உரிமைகள் பறிக்கப்படக்கூடாது என்பதில் கவனமாக உள்ளோம். மனித உரிமை மாண்புகள் போற்றி பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம். மனித உரிமைகள் காக்கும் பொறுப்பில் இருந்து ஒருநாளும் தவற மாட்டோம் என தெரிவித்தார்.
இதனைத்தொடர்ந்து பேசிய முதலமைச்சர், மனித உரிமை ஆணையத்தில் காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என்றும் மனித உரிமை ஆணையத்தின் இணையதளம் தமிழில் உருவாக்கப்படும் எனவும் உறுதியளித்தார். மேலும், சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக மற்ற வேண்டும். உச்சநீதிமன்றத்தின் கிளையை சென்னையில் அமைத்திட வேண்டும் என்றும் இவ்விழாவில் கோரிக்கை விடுத்தார்.
சென்னை : இசையமைப்பாளராக நம்மளுடைய மனதை கவர்ந்த ஹிப் ஹாப் ஆதி தன்னுடைய முதல் படமான மீசையை முறுக்கு படத்தின்…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்ற பேச்சுக்கள் தற்போது தமிழக…
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…
சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…