தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு தமிழக அரசு நோடீஸ்: விஷாலுக்கு ஆப்பாடிக்கும் அரசியல்வாதிகள்!

Default Image
  • தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் மற்றும் செயலாளருக்கு தமிழக வணிக வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது
  • தொடர்ந்து அரசியல் செயல்பாடுகளில் ஈடுபட்டு வந்த நடிகர் விஷாலை அரசியல்வாதிகள் பழிவாங்கும் நோக்கில் இது நடைபெற்று வருகிறது என அரசியல் விமர்சர்கள் கூறி வருகின்றனர்

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் மற்றும் செயலாளருக்கு வணிகவரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தயாரிப்பாளர் சங்கத்தின் பொதுக்குழுவிடம் ஆலோசிக்காமல் பல முக்கிய விஷயங்களில் விஷால் தன்னிச்சையாக முடிவெடுப்பதாகவும், ஒரு சில தயாரிப்பாளர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு, நிதி மோசடியில் ஈடுபட்டதாகவும் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் குற்றச்சாட்டு எழுந்தது.

இந்நிலையில், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் மற்றும் செயலாளருக்கு வணிகவரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தமிழக அரசின் வணிகவரித்துறை முதன்மை செயலாளர் பாலகிருஷ்ணன் அனுப்பியுள்ள இந்த நோட்டீசில்,  ஆண்டுதோறும் பொதுக்குழுவை கூட்டாதது, ஆவணங்களை பராமரிக்காதது, சங்க நிதியை தவறாக பயன்படுத்தியது ஏன் என பல கேள்விகளை கேட்டு அதற்கு 30 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்