கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்தில் 40 பேருக்கு கொரோனா வா..?

Published by
பால முருகன்

சென்னை கீழ்ப்பாக்கத்தில் மனநல காப்பகத்தில் 40 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னையில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது, இந்நிலையில் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள தமிழக அரசின் மனநல காப்பகத்தில் 800 பேர் மனநல சிகிச்சை பெற்று வருகிறார்கள், மேலும் அங்கு 40 வார்டுகள் உள்ளது, இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு அங்குள்ள சிலருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது, உடனடியாக அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது பரிசோதனையில் இவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில் அங்குள்ள 9வது வார்டில் சிகிச்சை பெற்றுவந்த 29 பேருக்கும் 6வது வார்டில் உள்ள 2 பேர் மற்றும் சிகிச்சை பெற்று வந்தவர்கள் மற்றும் ஊழியர்கள் உட்பட, 40 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது, மேலும் முக்கியமாக மருத்துவமனையில் இயக்குனர் மற்றும் மேற்பார்வையாளர் களுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டது குறிப்பிடதக்கது.

இதுகுறித்து அங்கு பணியாற்றும் ஊழியர்கள் உண்மையில் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை கூற மறுத்துள்ளார்கள் மேலும் இங்கு பணியாற்றும் அணைத்து ஊழியர்களுக்கும் முழு பாதுகாப்பு கவச உடை வழங்கவில்லை, மேலும் கையுறை மற்றும் மாஸ்க் மட்டுமே வழங்குகின்றனர். இதுதான் நோய் தொற்று பரவியதற்கு முக்கிய காரணம் என்றும் கூறியுள்ளனர்.

Published by
பால முருகன்

Recent Posts

தமிழ்நாடு அமைச்சரவையில் நிகழ்ந்த மாற்றம்.. யார் யாருக்கு எந்தெந்தத் துறை..?

தமிழ்நாடு அமைச்சரவையில் நிகழ்ந்த மாற்றம்.. யார் யாருக்கு எந்தெந்தத் துறை..?

சென்னை : முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் 6வது முறையாக அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பரிந்துரையின்படி அமைச்சரைவை…

25 minutes ago

MI vs LSG: பவுலிங்கில் மிரட்டிய பும்ரா.., திணறிய லக்னோ.! மும்பை அணி அபார வெற்றி.!

மும்பை : மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் 2025 - இன் 45வது…

12 hours ago

”தவெக ஆட்சியில் ஊழல் இருக்காது.,, சிறுவாணி தண்ணீர் போல ஆட்சியை அமைப்போம்” – விஜய்.!

குரும்பபாளையம் : கோவையில் நேற்றைய தினத்தை தொடர்ந்து, இன்றும் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக (தவெக) பூத் கமிட்டி கருத்தரங்கம்,…

13 hours ago

“புரட்சி உருவாகிக் கொண்டிருக்கிறது.., தேர்தல் முகவர்கள் சக்தி வாய்ந்தவர்கள்” – ஆதவ் அர்ஜுனா.!

சரவணம்பட்டி : கோவையில் 2ஆம் நாளாக இன்று (ஏப்.27) தவெக வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கு நடைபெறுகிறது. குரும்பபாளையத்தில் உள்ள கல்லூரி…

13 hours ago

கோவையே அதிருது.., “யாரையும் பணம் கொடுத்து கூப்பிடவில்லை” – என்.ஆனந்த்.!

கோவை : தவெக தலைவர் விஜய், கோவையில் இன்று இரண்டாவது நாளாக ரோட் ஷோவில் ஈடுபட்டுள்ளார். சரவணம்பட்டியில் நேற்று பூத்…

13 hours ago

MIv s LSG: ரிக்கல்டன் – சூர்யகுமாரின் வெறித்தனமான ஆட்டம்.., மிரண்டு போன லக்னோவுக்கு பெரிய இலக்கு.!

மும்பை : ஐபிஎல் 2025 இன் 45வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…

14 hours ago