ஓணம் பண்டிகையை முன்னிட்டு கோவை மாவட்டத்திற்கு ஆக. 31ம் தேதி உள்ளூர் விடுமுறை.!

Default Image

ஓணம் பண்டிகையை முன்னிட்டு வரும் ஆகஸ்ட் 31-ம் தேதி கோவை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளதாக கோவை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

கேரளாவில் வருட வருடம் விமர்சையாக கொண்டாடப்படும் பாரம்பரிய திருவிழாக்களில் ஒன்று ஓணம். இந்த வரும் கொரோனா பாதிப்பு காரணமாக பல கட்டுபாட்டுகளை அரசாங்கம் விதித்துள்ளது. ஆம் வீடுகளில் மட்டும் ஓண விழாவை கொண்டாட வேண்டும் என்றும் , பொது இடங்களில் ஓணம் நிகழ்ச்சிகளை நடத்த கூடாதும் என்றும் கூறி கேரள அரசு தடை விதித்துள்ளது.

இந்தநிலையில், கோவை மாவட்டத்திலும் ஏராளமான மலையாளிகள் வசித்து வருவதால் அங்கும் ஓணம் பண்டிகையை சிறப்பாக கொண்டாடுவார்கள். அந்த வகையில் ஓணம் பண்டிகையான ஆகஸ்ட் 31-ம் தேதி கோவை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளதாக கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி உத்தரவிட்டுள்ளார்.

அங்குள்ள கருவூலம் போன்ற பாதுகாப்பு அலுவலகங்கள் குறைந்த ஊழியர்களை கொண்டு இயங்கும் என்றும், மற்ற அனைவருக்கும் உள்ளூர் விடுமுறை என்றும் அறிவித்துள்ளார். மேலும், இந்த விடுமுறை தினத்திற்கு ஈடாக செப்டம்பர் 12-ம் தேதி வேலை நாளாக கருதப்படும் என்று தெரிவித்துள்ளார்.

ஓணம் பண்டிகையை மக்கள் சமூக இடைவெளியை பின்பற்றி பாதுகாப்புடன் கொண்டாட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்