இந்தியா மின்சார வாகன உற்பத்தியின் தலைநகரான தமிழகத்திற்கு முதலீடு செய்ய வாருங்கள் என அமைச்சர் தங்கம் தென்னரசு எலான் மஸ்க்கிற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இந்தியாவில் டெஸ்லா நிறுவனத்தின் கார்களுக்கு இறக்குமதி வரி சலுகை உள்ளிட்ட சலுகைகளை கோரி வருவதால் இந்தியாவில் டெஸ்லா நிறுவனத்தின் கார் கிடைப்பதற்கு சற்று காலதாமதம் ஆகிறது. எனவே இது குறித்து கேள்வி எழுப்பிய இந்தியாவை சேர்ந்த நபரிடம், உலகளவில் மின்சார கார்களை உற்பத்தி செய்து வரக்கூடிய டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க் பதிலளித்த போது, இந்திய அரசிடம் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருவதாக கூறியிருந்தார்.
இதனை அடுத்து தெலுங்கானா, மகாராஷ்டிரா, பஞ்சாப், மேற்கு வங்க அரசுகள் ஏற்கனவே தங்கள் மாநிலங்களில் முதலீடு செய்ய மஸ்க்கிற்கு அழைப்பு விடுத்துள்ளன. இந்நிலையில் தமிழகத்திலும் முதலீடு செய்ய வருமாறு தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் தற்போது அழைப்பு விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், இந்தியாவின் மொத்த மின்சார உற்பத்தியில் தமிழகத்தின் பங்கு 34 சதவீதமாக இருப்பதாகவும், எனவே இந்தியாவின் மின்சார வாகன உற்பத்தியின் தலை நகரமாக விளங்கும் தமிழகத்திற்கு முதலீடு செய்ய வரவேற்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் உலகளவில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தியில் தமிழகம் ஒன்பதாவது இடத்தில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து எலான் மஸ்க்கிற்கு அழைப்பு விடுத்த ஐந்தாவது இந்திய அரசியல்வாதியாகியுள்ளார் தமிழக அமைச்சர் தங்கம் தென்னரசு.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…