கத்தி, துப்பாக்கி ஆயுதங்களை கொண்டு கல்லூரி மாணவர்கள் மோதல்.!

Published by
பாலா கலியமூர்த்தி
  • செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைந்துள்ளது எஸ்ஆர்எம் கல்லூரி. அந்த கல்லூரிக்கு எதிரில் உள்ள கடைகளுக்கு அருகில் கூடியிருந்த மாணவர்கள் ஒருவரை ஒருவர் திடீரென தாக்கிக்கொண்டனர்.
  • இதில் சர்வ சாதரணமாக துப்பாக்கி மற்றும் கத்தியை எடுத்து ஒருவருக்கு ஒருவர் வெட்டி கொண்டனர். இதனால் மற்ற மாணவர்கள் அலறி அடித்து கொண்டு ஓடினர்.

செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூரை அடுத்து காட்டங்குளத்தூரில் அமைந்துள்ளது எஸ்ஆர்எம் கல்லூரி. அந்த கல்லூரிக்கு எதிரில் உள்ள கடைகளுக்கு அருகில் கூடியிருந்த மாணவர்கள் ஒருவரை ஒருவர் திடீரென தாக்கிக்கொண்டனர். இதில் சர்வ சாதரணமாக துப்பாக்கி மற்றும் கத்தியை எடுத்து ஒருவருக்கு ஒருவர் வெட்டி கொண்டனர். இதனைப் பார்த்த மற்ற மாணவர்கள் அலறி அடித்து கொண்டு ஓடினர். பின்னர் கையில் கத்தி மற்றும் துப்பாக்கி வைத்து மோதலில் ஈடுபட்ட இந்த சம்பவத்தை வேடிக்கை பார்த்த மாணவர்கள் செல்போனில் பதிவு செய்து வலைத்தளங்களில் பரப்பினர்.

இந்த சம்பவம் குறித்து போலீசுக்கு புகார் சென்றுள்ளது. பின்னர் தகவலறிந்து வந்த போலீசார் கல்லூரிக்கு சென்று தற்போது விசாரணை மேற்கொண்டும், இந்த வீடியோ காட்சியில் பதிவான மாணவர்களை தேடியும் வருகின்றனர். இதுபோன்று கடந்த வருடம் வண்டலூர் அருகே உள்ள வேங்கடமங்கலம் என்ற பகுதியில் ஒரு கல்லூரி மாணவன் முக்கேஷ் என்பவரை அவருடைய நண்பர் துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவம் இந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் தொடர்ந்து துப்பாக்கி சம்பவம் நடந்து வருவதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அச்சத்தையும் பொதுமக்களிடையே ஏற்படுத்துகின்றன. பின்னர் இதுகுறித்து போலீஸ் தீவிர விசாரணை நடத்தி வருகிறது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

போப் பிரான்சிஸ் உடல் நல்லடக்கம்! உலக நாட்டு தலைவர்கள் நேரில் மரியாதை!

போப் பிரான்சிஸ் உடல் நல்லடக்கம்! உலக நாட்டு தலைவர்கள் நேரில் மரியாதை!

வாடிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் மறைந்த போப் பிரான்சிஸின் இறுதி சடங்கு இன்று (ஏப்ரல் 26) காலை வாடிகான்…

11 hours ago

“ஓட்டு மட்டுமே குறிக்கோள் இல்லை., மக்களோடு பேசுங்கள்!” விஜய் கொடுத்த ‘குட்டி’ அட்வைஸ்!

கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கருத்தரங்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது.…

12 hours ago

ஈரான் துறைமுகத்தில் பயங்கர வெடி விபத்து! 300க்கும் மேற்பட்டோர் காயம்!

தெஹ்ரான் : தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் ஷாகித் ராஜீ துறைமுகம் செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று திடீரென…

13 hours ago

தவெக பூத் கமிட்டி கருத்தரங்கில் சிறிய தீ விபத்து? “ஒதுங்கி நில்லுங்கள்!” விஜய் அட்வைஸ்!

கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார்…

13 hours ago

தவெக பூத் கமிட்டி கருத்தரங்கு.., என்ன பேசப்போகிறார் விஜய்?

கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.…

14 hours ago

கட்டாய கடன் வசூல்., 3 ஆண்டுகள் சிறை! புதிய சட்ட மசோதா விவரங்கள் இதோ…

சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…

16 hours ago