சென்னையில் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராடிய கல்லூரி மாணவர்கள் கைது…!!!
சென்னையில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய கல்லூரி மாணவர்கள் போலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தேசிய பசுமை தீர்ப்பாயம் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதி அளித்ததையடுத்து, பல இடங்களில் போராட்டங்கள் வெடித்து வருகிறது. இந்நிலையில், சென்னையில் கல்லூரி மாணவர்கள் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்தியுள்ளனர். இதனையடுத்து, போலீசார் உடனடியாக மாணவர்களை கைது செய்துள்ளனர்.