சத்யா கொலை வழக்கு.! மாணவி அம்மா மற்றும் ரயில் ஓட்டுனரிடம் தீவிர விசாரணை.!

கொலைசெய்யப்பட்ட மாணவி சத்யாவின் தயார் ராமலட்சுமி மற்றும் ரயில் ஓட்டுனரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் மாணவி சத்யாவை, ரயில் முன் தள்ளிவிட்டு சதீஷ் என்கிற இளைஞன் கொலை செய்த விவகாரம் தமிழகத்தையே உலுக்கியது.

 ஒருதலை காதல் விவகாரத்தில், மோதல் முற்றி இவருவருக்கும் ஏற்பட்ட சண்டையால் தான் இந்த கொலை நடந்துள்ளது என தகவல் வெளியாகி வருகின்றன. இதில் கொலையாளி சதீஷை உடனடியாக சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து கைது செய்தனர்.

இந்த வழக்கை டிஜிபி சைலேந்திரபாபு அவர்கள் ஆணையின்படி சிபிசிஐடி போலீசார் வசம் ஒப்படைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து சதீஷை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைத்து சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கொலையாளி சதீஸ் – மாணவி சத்யா இடையான பிரச்சனை, சதீஷ் மீது சத்யா குடும்பத்தார் கொடுத்த புகார்கள் போலீசார் மூலம் சுமூக பேச்சுவார்த்தை நடத்தி அப்போதைக்கு முடித்துவைக்கப்பட்டதாக நிகழ்வுகள். கொலை நடந்த நாளில், சதீஷ் எவ்வாறு பின்தொடர்ந்து கொலை செய்து பின்னர் தப்பி சென்றான் என்கிற விவரம் எல்லாம் சிபிசிஐடி போலீசார் சேகரித்து வைத்துள்ளனர்.

அதன்படி, தற்போது சத்யா தாயும், காவலரும் ராமலட்சுமியிடமும், ரயில் ஓட்டிய ஓட்டுனரிடமும் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்