கல்லூரி வளாகங்களில் ஆவின் பாலகம்.! பால்வளத்துறை அமைச்சர் பேச்சு.!

Default Image
  • தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி 206 கல்லூரிகளில் ஆவின் பாலகம் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், மேலும் கோரிக்கை வரும் கல்லூரி வளாகங்களில் அமைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

கடந்த 17-ம் தேதி முதல் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் மீண்டும் தொடங்கியது. இந்த நிலையில் தமிழக பட்ஜெட் தாக்களுக்கு பிறகு இன்று 3-வது நாளாக தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்றது. இதில் பல்வேறு பட்ஜெட்டுகளை குறித்து ஆளும் கட்சி அறிவித்தனர். மேலும் பல்வேறு விவாதங்களை எதிர்க்கட்சி விவாதிக்கப்பட்டனர். அப்போது 200 கல்லூரிகளில் ஆவின் பாலகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கடந்த கூட்டத் தொடரில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.

அதன் நிலை என்ன என்றும், திருப்பத்தூர் கலைக்கல்லூரி வளாகத்தில் ஆவின் பாலகம் அமைக்கப்படுமா என்று சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, தற்போது 206 கல்லூரிகளில் ஆவின் பாலகம் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், மேலும் கோரிக்கை வரும் கல்லூரி வளாகங்களில் அமைக்கப்படும் என்றும் தெரிவித்தார். திருப்பத்தூர் கலைக்கல்லூரி நிர்வாகத்திடம் அனுமதி பெறப்பட்டுள்ளதாகவும் விரைவில் ஆவின் பாலகம் அங்கு அமைக்கப்படும் என்றும் கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

ooty kodaikanal chennai hc
Venkatesh Iyer - rahane
Tamilnadu CM MK Stalin - TN Budget 2025 Rupees symbol
world cup 2027
TN Budget - TN Govt
train hijack pakistan