கல்லூரி விடுதி திறப்பு…யுஜிசி நிபந்தனை..!

Default Image

தமிழகத்தில் வருகின்ற 16-ம் தேதி கல்லூரிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், மாணவர்கள் நோய் தொற்றுக்கு ஆளாக நேரிடும் என்பதால் விடுதிகளில் கடுமையான கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும் என பல்கலைக் கழகங்கள் மற்றும் கல்லூரி நிர்வாகங்களுக்கு பல்கலைக் கழக மானியக் குழு உத்தரவு பிறப்பித்துள்ளது.

கல்லூரி விடுதிகளுக்கு வரும் மாணவர்கள் 14 நாள்கள் தனிமைப்படுத்த வேண்டும். கொரோனா இல்லை என்ற சான்றிதழ் இருந்தாலும் விடுதியில் பயிலும் மாணவர் 14 நாள்கள் தனிமைப்படுத்த வேண்டும் என யுஜிசி தெரிவித்துள்ளது.

கல்லூரிகள் திறக்கப்பட்டால் விடுதி அறையில் தலா ஒரு மாணவர் மட்டுமே தங்கவேண்டும் என பல்கலைக் கழக மானியக் குழு தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்