கோவை தெற்கு யாருக்கு..? மிகப்பெரிய போட்டியாக மாறிய தொகுதி.!

Published by
murugan

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதைத் தொடர்ந்து அனைத்து கட்சியினரும் கூட்டணிக் கட்சிகளுக்கு தொகுதிப் பங்கீடு, மற்றும் வேட்பாளர்களை அறிவித்து வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் பாஜக 20 தொகுதிகளில் போயிடுகிறது. போட்டியிடும் 20 வேட்பாளர்களில் 17 வேட்பாளர்களின் பட்டியலை  பாஜக வெளியிடப்பட்டுள்ளது. இன்னும் 3 வேட்பாளர்களின் பட்டியல் பாஜக விரைவில் வெளியிடம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கோவை தெற்கு தொகுதியில் பாஜக சார்பாக பாஜக தேசிய மகளிர் அணித் தலைவி வானதி சீனிவாசன் போட்டியிடுகிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது. கோவை தெற்கு வானதி சீனிவாசனுக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட வானதி சீனிவாசனுக்கே வாய்ப்பு கிடைத்த்துள்ளது. இந்நிலையில், வருகின்ற சட்டசபை தேர்தலில் கோவை தெற்கு தொகுதி கடுமையான போட்டி நிலவும் தொகுதியாக மாறியுள்ளது. காரணம் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள், இங்கு மக்கள் நீதி மய்யம் சார்பாக கமல்ஹாசனும், காங்கிரஸ் சார்பாக மயூரா ஜெயக்குமாரும், பாஜக சார்பில் வானதி சீனிவாசனும் போட்டியிட உள்ளனர்.

கடந்த தேர்தலில் அதிமுக சார்பாக அம்மன் கே. அர்ஜுனன் போட்டியிட்டு வெற்றிபெற்றார். இந்த முறை கோவை தெற்கு தொகுதியில் அதிமுக, திமுக நேரடியாக போட்டியிடவில்லை அதற்க்கு பதிலாக தங்களது கூட்டணி கட்சிகளுக்கே வாய்ப்பு அளித்துள்ளனர். கமல்ஹாசன் முதல் முறையாக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுகிறார். மக்கள் நீதி மயய்ம் கட்சி தனித்து அல்லது வேறு கட்சிகளுடன் கூட்டணி அமைக்குமா என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சமக, ஐஜேகே கட்சிகளை கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கவுள்ளது.

கமல்ஹாசன் எங்கு போட்டியிடுவார் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியை தேர்வு செய்தார். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் கோவை தெற்கு, கோவை வடக்கு, சிங்கநல்லூர் ஆகிய பகுதிகளில் மக்கள் நீதி மய்யம் வாங்கிய ஒட்டு அதிமுக, திமுக ஆகிய கட்சிகள் திரும்பி பார்க்க வைத்தது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் கோவை தொகுதியில் மக்கள் நீதி மய்யம் 1.5 வாக்குகளை பெற்றது.

இதன் காரணமாகவே மக்கள் நீதி மயய்ம் தலைவர் கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியை தேர்வு செய்துள்ளார். அதுமட்டுமல்லாமல் தேசிய காட்சிகளை எதிர்த்து போட்டியிட்டு வெற்றிபெற்றால் இதனால் கிடைக்கும் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டே இந்த தொகுதியை தேர்வு செய்துள்ளார்.

காங்கிரஸ் சார்பாக போட்டியிடும் அரசியல்வாதியான மயூரா ஜெயக்குமார், மயூரா ரேடியோஸ் உள்ளிட்ட நிறுவனங்களை நடத்தி வருகிறார். கோயம்புத்தூரை சேர்ந்தவர் என்பதால் அவருக்கு ஆதரவு அங்கு உள்ளது.

பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் கோவை தெற்கில் சற்று செல்வாக்கு பெற்றவர். வரும் தேர்தலில் வானதி சீனிவாசன் எளிதாக வென்றுவிடுவார் என்று நினைத்திருந்த நிலையில் கமல்ஹாசன் போட்டியிடுவதாக அறிவித்ததால், கோவை தெற்கு தொகுதி  மிகப்பெரிய போட்டி தொகுதியாக மாறியுள்ளது.

Published by
murugan

Recent Posts

சாத்தான்குளம் கிணற்றுக்குள் மூழ்கிய வேன் மீட்பு – 5 பேர் பலி.! முதல்வர் நிவாரணம் அறிவிப்பு.!சாத்தான்குளம் கிணற்றுக்குள் மூழ்கிய வேன் மீட்பு – 5 பேர் பலி.! முதல்வர் நிவாரணம் அறிவிப்பு.!

சாத்தான்குளம் கிணற்றுக்குள் மூழ்கிய வேன் மீட்பு – 5 பேர் பலி.! முதல்வர் நிவாரணம் அறிவிப்பு.!

தூத்துக்குடி: தஞ்சாவூரில் இருந்து திருமண நிகழ்ச்சி ஒன்றிற்காக பயணித்து சாத்தான்குளம் வட்டம், மீரான்குளம் பகுதியில் சாலையோரமாக இருந்த 50 அடி…

6 hours ago
RCB vs KKR : ரசிகர்ளுக்கு ஷாக்!! மழையால் கைவிடப்பட்ட போட்டி.., வெளியேறியது நடப்பு சாம்பியன்.!RCB vs KKR : ரசிகர்ளுக்கு ஷாக்!! மழையால் கைவிடப்பட்ட போட்டி.., வெளியேறியது நடப்பு சாம்பியன்.!

RCB vs KKR : ரசிகர்ளுக்கு ஷாக்!! மழையால் கைவிடப்பட்ட போட்டி.., வெளியேறியது நடப்பு சாம்பியன்.!

பெங்களூர் : இந்தியா, பாகிஸ்தான் தாக்குதலால் நிறுத்தப்பட்ட ஐபிஎல் தொடர் மீண்டும் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி…

6 hours ago
சென்னை சாலையில் திடீர் பள்ளம்.., உள்ளே சிக்கிய கார்.! மெட்ரோ நிர்வாகம் விளக்கம்!சென்னை சாலையில் திடீர் பள்ளம்.., உள்ளே சிக்கிய கார்.! மெட்ரோ நிர்வாகம் விளக்கம்!

சென்னை சாலையில் திடீர் பள்ளம்.., உள்ளே சிக்கிய கார்.! மெட்ரோ நிர்வாகம் விளக்கம்!

சென்னை : திருவான்மியூர் - தரமணி சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையின்…

9 hours ago

பாகிஸ்தானுக்கு உளவு வேலை பார்த்த ஹரியானா பெண் யூடியூபர் கைது.!

ஹரியானா : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கப்பட்டதிலிருந்து இந்தியாவை உளவு பார்த்ததாகவும், பாகிஸ்தானின் ஐஎஸ்ஐக்கு தகவல்களை வழங்கியதாகவும் கூறி, ஹரியானாவில் இதுவரை…

9 hours ago

RCB vs KKR: வெளுத்து வாங்கும் மழையால் டாஸ் போடுவதில் தாமதம்.!

பெங்களூர் : இந்தியா-பாகிஸ்தான் எல்லை பதட்டங்கள் காரணமாக 10 நாள் இடைவெளிக்குப் பிறகு ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்கவுள்ள நிலையில்,…

10 hours ago

சிங்கப்பூர், ஹாங்காங்கில் மீண்டும் பரவும் கொரோனா.., சுகாதாரத்துறை எச்சரிக்கை.!

சீனா : 2019 ஆம் ஆண்டில் உலகையே உலுக்கிய கொரோனா வைரஸ் தொற்று, ஆசியாவின் சில பகுதிகளில் மீண்டும் பரவி…

11 hours ago