கோவை குண்டுவெடிப்பு சம்பவம் – காவல்துறையினரை பாராட்டிய அண்ணாமலை…!

Default Image

மாநில அரசு நன்றாக செயல்பட வேண்டும் என்பதற்காகவே நான் கருத்துக்களை சொல்கிறேன் என அண்ணாமலை பேட்டி. 

கோவையில், கோவை கார் சிலிண்டர் வெடிப்பு நிகழ்ந்த இடத்தை பார்வையிட்ட பின் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.

அப்போது பேசிய அவர், கோவை சம்பவத்தில் எந்தவித மத சாயத்தையும் பூசவில்லை பாஜக எந்த மதத்திற்கும் எதிரான கட்சி அல்ல எந்த மதத்தை சார்ந்தவராக இருந்தாலும் வன்முறையை கையில் எடுக்க கூடாது.

கோவை மாநகர காவல் துறையினர் சிறப்பாக செயல்பட்டுள்ளனர். அதற்காக நாம் காவல்துறையினருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளோம். ஐ.எஸ்.கொள்கை தவறு என இஸ்லாமிய குருமார்களே கூறுகின்றனர்.

மாநில அரசு நன்றாக செயல்பட வேண்டும் என்பதற்காகவே நான் கருத்துக்களை சொல்கிறேன். தொந்தரவு செய்வதற்காக அல்ல; எந்த மதத்திற்கும் பாஜக எதிரானது அல்ல என தெரிவித்துள்ளார். மேலும், அண்ணாமலை கோயில் அருகே கிடந்ததாக மக்கள் எடுத்து கொடுத்த பால்ரஸ் குண்டு மற்றும் ஆணிகளை காண்பித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்