அமமுக – தேமுதிக இடையே மீண்டும் கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கியதாகவும், தேமுதிகவிற்கு 50 முதல் 55 இடங்கள் வரை ஒதுக்க முன்வந்திருப்பதாக தகவல்கள் வெளியானது.
அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக வெளியேறியதை தொடர்ந்து அமமுக – தேமுதிக கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. இதனால் விரைவில் அமமுக- தேமுதிகவுடன் கூட்டணி உறுதியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த பேச்சுவார்த்தையை நிறுத்தி, தனித்து போட்டியிட தேமுதிக முடிவு செய்துள்ளது.
இதனைதொடர்ந்து வேட்பாளர் பட்டியல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தனித்து போட்டியிட பலரும் மறுப்பு தெரிவித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், அமமுக – தேமுதிக இடையே மீண்டும் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த பேச்சுவார்த்தையில் தேமுதிகவுக்கு 50 முதல் 55 தொகுதிகள் வரை ஒதுக்க அமமுக முன்வந்திருப்பதாகவும், தேமுதிக விருப்பம் தெரிவித்துள்ள 30 முதல் 35 தொகுதிகள் ஒதுக்க அமமுக தயாராகவுள்ளதாகவும், இன்று மாலை அல்லது நாளை இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று தகவல்கள் வெளியானது.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…